உள்ளூர் செய்திகள்

சிறுமிகளை காதலித்து பலாத்காரம் செய்த வாலிபர்கள் கைது

Published On 2022-08-17 08:19 GMT   |   Update On 2022-08-17 08:19 GMT
  • மதுரையில் சிறுமிகளை காதலித்து பலாத்காரம் செய்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.

மதுரை

மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் சிறுமிகளை காதலித்து பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரை தெற்குவெளி வீதியை சேர்ந்த வாலிபர், மகபூப்பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்தார்.

திருமண ஆசை காட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தெற்கு அனைத்து மாநில காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.

மதுரை மேல பனங்காடி-குலமங்கலம் மெயின் ரோடு கருப்பையா புரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 19).இவர் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News