உள்ளூர் செய்திகள்
- 2 குழந்தைகளுடன் பெண் மாயமானார்.
- சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் சாப்டூர் போலீஸ் சரகம் அத்திபட்டியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மனைவி திவ்யா(32). இவர்களுக்கு காயத்திரி(7), ஆதேஸ்(2) என்ற குழந்தைகள் உள்ளனர். கடந்த
23-ந் தேதி முதல் திவ்யா மற்றும் மகள் காயத்ரி, மகன் ஆதேஸ் ஆகியோரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து திவ்யாவின் தந்தை சண்முகவேல் கொடுத்த புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.