உள்ளூர் செய்திகள்
கொட்டும் மழையிலும் கோவிலில் அலை மோதிய கூட்டம்
- வாடிப்பட்டி பகுதியில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி கொட்டும் மழையிலும் கோவிலில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
- சீனிவாச பெருமாள், திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி பொன்மலை அடிவாரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சீனிவாச பெருமாள், திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
அன்னதானத்தை முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் சோனை தலைமை தாங்கி வழங்கினார். கவுன்சிலர்கள் அசோக்குமார், இளங்கோவன், சூர்யா முன்னிலை வகித்தனர்.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நீரேத்தான் நவநீத பெருமாள் கோவில், தாதம்பட்டி மேட்டு பெருமாள் நகர் நீலமேகப்பெருமாள் கோவில், கச்சைகட்டி நீலமேகப்பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை, அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலையில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கூட்டத்தினர் நனைந்தபடி தரிசனம் செய்தனர்.