search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் கூட்டம்"

    • ஈரோடு மாவட்டத்தில் மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
    • ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளதையொட்டி தொடர் விடுமுறை அறிவிக்கப்ப ட்டுள்ளது. தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் குடும்பத்துடன் நேற்று மதியம் முதல் செல்ல தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

    நேற்று மதியம் முதல் ஈரோடு பஸ் நிலையம் மற்றும் ெரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. தீபாவளி முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    முன்பதிவு அனைத்தும் நிரம்பி விட்டதால் சிறப்பு பஸ்களில் மக்கள் இடம் பிடிக்க போட்டா போட்டி போட்டனர்.

    குறிப்பாக நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை, நாகர்கோவில் போன்ற தொலைதூர ஊருக்கு செல்லும் பஸ்களில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவியது. இது தவிர சேலம், கோவை, திருப்பூர் பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க ஈரோடு பஸ் நிலையத்தில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள புறநகர் காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மக்கள் நடவடி க்கைகளை கண்காணித்து வருகின்றனர்.

    பஸ் நிலை யத்தில் தேவை யில்லாமல் சுற்றி திரிந்த நபர்களை எச்சரித்து அனுப்பி வைத்த னர். இதேபோல் சில குடிமகன்கள் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.

    அவர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இன்று காலை முதலே ஈரோடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குடும்ப குடும்பமாக மக்கள் சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்றனர்.

    இதனால் ஈரோடு பஸ் நிலையம் இன்று பரபரப்பாக காட்சியளி க்கப்பட்டது. மேலும் ஈரோடு போலீஸ் சார்பில் பஸ் நிலையத்தில் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு அங்கு 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு ெரயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் இன்று அதிக அளவில் இருந்தது. பொதுவாக ஈரோடு ெரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.

    தற்போது தொடர் விடு முறை வருவ தால் கடந்த 2 நாட்களாக ஈரோடு ெரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

    அனைத்து ெரயில்களி லும் முன்பதிவு நிரப்பி விட்டதால் முன்பதிவு இல்லாத பெட்டி களில் பயணிக்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    குறிப்பாக மதுரை, நெல்லை, நாகர்கோவில் செல்லும் ெரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிலர் நின்று கொண்டே பயணித்தனர்.

    ெரயில் நுழைவு பகுதியில் ஈரோடு ெரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி சமயம் என்பதால் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி யாராவது பட்டாசு கொண்டு செல்கின்றார்களா என்பதை கண்காணிக்கும் வகையில் ெரயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து அதன் பிறகு அவர்களே உள்ள அனுமதிக்கின்றனர்.

    தறி தொழிலாளர்கள், நெசவுத் தொழிலா ளர்களுக்கு தொடர் விடுமுறை வருவதால் அவர்கள் அனைவரும் குடும்பமாக இன்று ெரயில்களில் கிளம்பி சென்றனர்.

    இதனால் இன்று ஈரோடு ெரயில் நிலையம் பரபரப்பாக காட்சியளிக்கப்பட்டது.

    • தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (12-ந் தேதி)நாடு முழுவதும் கோலா கலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளதால் ஜவுளி கடைகள், நகை கடைகள், பட்டாசு கடைகளில் இறுதி கட்ட விற்பனை களை கட்டியுள்ளது.
    • நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்பதால் இன்று மாலையும் அதிக அளவில் பொது மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதையொட்டி நேற்று முன்தினம் முதல் சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (12-ந் தேதி)நாடு முழுவதும் கோலா கலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளதால் ஜவுளி கடைகள், நகை கடைகள், பட்டாசு கடைகளில் இறுதி கட்ட விற்பனை களை கட்டியுள்ளது.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருந்து அதிக அளவில் பொது மக்கள் ஜவுளிகடைகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். குடும்பத்துடன் வரும் அவர்கள் தங்களுக்கு பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர். இதனால் சேலம் கடை வீதி முதல் அக்ரகாரம், புதிய பஸ் நிலையம், நான்கு ரோடு, 5 ரோடு பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது . இதனால் ஜவுளி விற்பனை களை கட்டி உள்ளது.

    இதே போல கடை வீதி மற்றும் புதிய பஸ் நிலைய பகுதிகளில் உள்ள நகை கடைகளிலும் குவியும் பெண்கள் தங்களுக்கு பிடித்த தங்கம், வைர நகைகளை தேர்வு செய்து வாங்கி செல்கிறார்கள். பட்டாசு கடைகளிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் குவிந்துள்ளனர். அவர்கள் புதிதாக கு வித்து வைக்கப்பபட்டுள்ள புதிய ரக பட்டாசுகளை வாங்கி செல்கிறார்கள்.

    இதே போல மளிைக கடைகளிலும் பெண்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். தீபாவளிக்கு பலகாரங்கள் செய்ய தேவையான எண்ணை, மாவு வகைகள் மற்றும் மளிகை பொருட்களும் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி சேலத்தில் உள்ள இனிப்பு கடைகள், ஐஸ்கிரீம் கடைகள், ஜூஸ் கடைகள், ஓட்டல்கள் நிரம்பி வழிகிறது. பழ வகைகள் விற்பனையும் தற்போது அதிகரித்துள்ளது.

    சேலம் மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும் மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டை தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அருணாச்சல ஆசாரி தெரு, முதல் அக்ரகாரம், 2-வது அக்ரஹாரம், பழைய, புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், 4 ரோடு, 5 ரோடு, சொர்ணபுரி ஏ.வி.ஆர் ரவுண்டானா, சாரதா கல்லூரி சாலை உள்பட பல பகுதிகளில் காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சேலம் மாநகரில் தீபாவளி திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில், ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சாதாரண உடையிலும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    சேலத்தில் ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு தீபாவளி பண்டிகையை யொட்டி இன்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை முதலே தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட புறப்பட்டு சென்றனர்.

    இதே போல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரும் விடுமுறை எடுத்து கொண்டு தீபாவளி பண்டிகையை 4 நாட்கள் கொண்டாடும் வகையில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மாலை முதல் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்பதால் இன்று மாலையும் அதிக அளவில் பொது மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதையொட்டி நேற்று முன்தினம் முதல் சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக சென்னை, பெங்களூரு, திருப்பூர், மதுரை, திருச்சி, கோவை உள்பட பல ஊர்களுக்கு அதிக அளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் கூட்டம் அலை மோதியது.

    இதே போல சேலம் வழியாக சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு செல்லும் ரெயில்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    • ஈரோடு பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • முன்பதிவு இல்லாத பெட்டிகள் நிரம்பி வழிந்தன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வர்கள் இங்கு பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைகள் படிப்புக்காக, தொழிலு க்காக, வேலைக்காக சொந்த ஊரைவிட்டு ஈரோடு மாவ ட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இவ்வாறு வேறு மாவட்ட ங்களை சேர்ந்தவர்கள் தொடர் விடுமுறை கார ணமாக சொந்த ஊரை நோக்கி படையெடுப்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால் ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காண ப்படும். தற்போது சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை வருகிறது.

    அதாவது சனி, ஞாயிறு, திங்கட்கிழமை சரஸ்வதி பூஜை விடுமுறை, செவ்வா ய்க்கிழமை விஜயதசமி விடுமுறை என தொடர்ந்து 4 4 நாட்கள் விடுமுறை வருகிறது

    இதையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் படை எடுக்கத் தொடங்கியு ள்ளனர். நேற்று மாலை ஈரோடு பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    குறிப்பாக கோவை, சேலம், மதுரை, கரூர் செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. திருநெல்வேலி, சென்னை, நாகர்கோவில் போன்ற தொலைதூர பயணத்திற்கு மக்கள் முன் பதிவு செய்திருந்தனர்

    இதனால் அனைத்து பஸ்களும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. மக்கள் குடும்பம் குடும்பமாக சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் இருந்தனர். வார இறுதி நாட்களில் பயணிகள் சிரமமின்றி செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 52 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதே போல் ஈரோடு ரெயில் நிலையத்தில் வழக்க த்தை விட இன்று காலை பயணிகள் கூட்டம் அதி கமாக இருந்தது. ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகள் எந்த ஒரு சிரம மின்றி தங்கள் குடும்பத்துடன் சென்றனர்.

    முன் பதிவு செய்யாத பயணிகள் ெரயி லில் இடம் பிடிக்க போட்டா போட்டி போட்ட னர். குறிப்பாக திருநெ ல்வேலி, சென்னை, மதுரை செல்லும் ெரயி ல்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்ப ட்டது.

    முன்பதிவு இல்லாத பெட்டிகள் நிரம்பி வழிந்தன.

    • பெருமாள் கோவில்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் அலைமோதி பயபக்தியுடன் சாமி கும்பிட்டு வந்தனர்.
    • தேவையான மீன் வகைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர்.

    கடலூர்:

    புரட்டாசி மாதம் பெரு மாளுக்கு உகந்த மாதம் என்பதால் கடந்த 3 வாரமாக பொதுமக்கள் விரத முறையை கடைப்பிடித்தனர். நேற்று 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு கடலூர் திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் அலைமோதி பயபக்தியுடன் சாமி கும்பிட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை முடிந்த நிலையில் இன்று காலை முதல் கடலூர் துறைமுகம் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி தங்களுக்கு தேவையான மீன் மற்றும் இறைச்சிகளை வாங்கி சென்றனர்.

    இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் கடந்த மூன்று வாரமாக பொது மக்கள் இல்லாமல் வெறிச் சோடி காணப்பட்டதோடு, நேற்று ஆங்காங்கே இறைச்சி கடைகள் மூடப் பட்டு இருந்தது. இன்று அதிகாலை 3 மணி முதல் வியாபாரி களும், பொதுமக்களும் ஏராளமான அளவில் அங்கு குவிந்தனர். மேலும் தங்களுக்கு தேவையான மீன் வகைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர்.

    இதில் வஞ்சரம் கிலோ 650 முதல் 700 ரூபாய்க்கும், சங்கரா மீன் 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரைக் கும், பன்னி சாத்தான் மீன் 350 ரூபாய்க்கும், பாறை மீன் 350 ரூபாய்க்கும், கனவா வகை மீன்கள் 250 ரூபாய்க்கும், நெத்திலி மீன் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல இறைச்சி கடைகளிலும் பொது மக்கள் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப் பட்டது.

    • இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் சார்பில் புதிதாக ஒரு சலுகையை வெளியிட்டுள்ளனர்.
    • வாகனத்திற்கு ரூ.50 பெட்ரோல் இலவசமாக பெறலாம். இந்த சலுகை இன்று முதல் 6-ந் தேதி வரை வழங்கப்படுகிறது.

    நாமக்கல்:

    இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் சார்பில் புதிதாக ஒரு சலுகையை வெளியிட்டுள்ளனர். அதாவது வாகன ஓட்டிகள் தங்களது மொபைல் எண்ணை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு ஒருமுறை கடவு எண் வரும். அதனை பதிவிட்டால் வாகனத்திற்கு ரூ.50 பெட்ரோல் இலவசமாக பெறலாம். இந்த சலுகை இன்று முதல் 6-ந் தேதி வரை வழங்கப்படுகிறது.

    நாமக்கல் அடுத்துள்ள முத்துகாப்பட்டியில் இந்தியன் ஆயில் நிறு வனத்தின் சார்பில் இயங்கி

    வரும் பெட்ரோல் பங்க்கில்

    இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரிய வந்ததால், ஏராளமானோர் பெட்ரோல் பங்கிற்கு படையெடுத்து வருகின்ற னர். அதன்படி இணையதளத்தில் தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து விட்டு ரூ.50-க்கான பெட்ரோலை இலவசமாக வாகனங்களுக்கு நிரப்பி சென்றனர்.

    மேலும், ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் ஒரு முறை பதிவு செய்து விட்டு பணம் செலுத்தி பெட்ரோல் நிரப்பினால், அதற்கான பாயிண்டுகள் ஏறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சலுகை தமிழகம் முழுவதும் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து பெட்ரோல் பங்க்குளில் உள்ளதாகவும், மேலும் இந்த சலுகை பெட்ரோலுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    • பொங்கல் பண்டிகைக்காக ஏற்கனவே ரெயில்களில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன.
    • இதேபோல் பஸ்களிலும் முன்பதிவு இருக்கை நிரம்பி விட்டன.

    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையையொட்டி இன்று போகி பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து நாளை, பொங்கல், மறுநாள் மாட்டுப்பொங்கல், அதன் மறுநாள் காணும் பொங்கல் எனத் தொடர்ந்து இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

    இதையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் கொண்டாடும் வகையில் ரெயில்கள், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    பொங்கல் பண்டிகைக்காக ஏற்கனவே ரெயில்களில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. இதேபோல் பஸ்களிலும் முன்பதிவு இருக்கை நிரம்பி விட்டன.

    இந்நிலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்ய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று அதிகாலை முதலே ஈரோடு ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க மக்கள் போட்டி போட்டனர். ஏராளமான பேர் குடும்பத்துடன் நேற்று இரவு முதல் ரெயில் நிலையங்களில் குவிய தொடங்கினர்.

    இதனால் ஈரோடு வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.

    இதேபோல் ஈரோடு பஸ் நிலையங்களிலும் நேற்று இரவு முதல் கூட்டம் அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிகையை மக்கள் சிரமம் இன்றி கொண்டாடும் வகையில் ஏற்கனவே இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் நேற்று இரவு முதல் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் அந்த பஸ்களில் இடம் பிடிக்க பயணிகள் போட்டா போட்டி போட்டனர். இதனால் பஸ் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    இதேபோல் இன்று இரவும் ஈரோடு ரெயில் நிலையம், பஸ் நிலையங் களில் கூட்டம் அதிகமாக இருக்கும். கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக ஈரோடு பஸ் நிலையத்தில் போலீசார் 24 மணி நேரமும் கண்கா ணித்து வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு மாநகரில் முக்கிய வீதிகளான ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு பகுதி, பன்னீர்செல்வம் பார்க், ஆர்கே.வி. ரோடு பகுதிகளில், கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் இன்று வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் வகையில் ஜவுளிக்கடைகளில் கூட்டம் குவிய தொடங்கியது.

    பெரிய ஜவுளி கடைகள் முதல் சாதாரண நடை பாதை ஜவுளி கடைகள் வரை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பெண்களுக்கான பேன்சி கடையிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    • அப்டா மார்க்கெட் மற்றும் வடசேரி மார்க்கெட் பகுதிகளில் கரும்புகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு உள்ளது. கரும்பு ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • நாகர்கோவில் நகரில் மட்டுமின்றி களியக்கா விளை, மார்த்தாண்டம், குழித்துறை, இரணியல், கன்னியாகுமரி, அஞ்சு கிராமம் பகுதியில் உள்ள கடைவீதிகளிலும் பொங்கல் பண்டிகையொட்டி புத்தாடைகள் எடுப்பதற்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    நாகர்கோவில்:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15 ந்தேதி கொண்டா டப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட அனைத்து தரப்பினரும் தயாராகி வருகிறார்கள்.புதுமண தம்பதியினருக்கு பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள், கிழங்கு, புத்தாடைகள் என சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. நாகர்கோவிலை பொறுத்த மட்டில் கோட்டாறு மார்க்கெட்டில் பொங்கல் விடுவதற்கு தயாராக பானைகள் வாங்குவதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். விதவிதமான பானைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.இதை பொதுமக்கள் தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

    சுங்கான் கடை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண் பானைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. கரும்பு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அப்டா மார்க்கெட் மற்றும் வடசேரி மார்க்கெட் பகுதிகளில் கரும்புகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு உள்ளது. கரும்பு ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் ஆர்வ மாக வந்து கரும்பை வாங்கி செல்கிறார்கள். பொங்கல் சீர் வரிசை கொடுக்க பொதுமக்கள் கட்டு கட்டாக கரும்பை வாங்கி செல்கின்ற னர். மஞ்சள்குலை விற்ப னைக்கு குவித்து வைக்கப் பட்டுள்ளது. வடசேரி பகுதி யில் சாலை ஓரங்களில் மஞ்சள் குலைகள் விற்ப னைக்கு அதிக அளவு வைத்திருந்தனர். கிழங்கு வகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் புத்தாடைகள் எடுப்பதற்கும் பொதுமக்கள் கடை வீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். இத னால் செம்மங்குடி ரோடு, மீனாட்சிபுரம் கலெக்டர் அலுவலகம் சந்திப்பு, மணிமேடை பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது.

    நாகர்கோவில் நகரில் மட்டுமின்றி களியக்கா விளை, மார்த்தாண்டம், குழித்துறை, இரணியல், கன்னியாகுமரி, அஞ்சு கிராமம் பகுதியில் உள்ள கடைவீதிகளிலும் பொங்கல் பண்டிகையொட்டி புத்தாடைகள் எடுப்பதற்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    மேலும் கரும்பு விற்பனையும் களைகட்டி உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து கரும்புகள் விற்ப னைக்காக லாரிகளில் கொண்டு அடுக்கி வைக்கப் பட்டு உள்ளது. பொது மக்கள் அதை ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள்.

    • தீபாவளி தொடர்விடுமுறை முடிந்ததையடுத்து நேற்று காலை முதலே ஏராளமானவர்கள் மீண்டும் வெளியூருக்கு புறப்பட்டு சென்றனர்.
    • தென்காசி புதிய பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் முழுவதும் நிரம்பி சென்றது.

    தென்காசி:

    தீபாவளி பண்டிகை கடந்த 24-ந்தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்வந்தனர். அந்தவகையில் தென்காசி மாவட்டத்திற்கு ஏராளமானவர்கள் வந்தனர்.

    இந்நிலையில் தீபாவளி தொடர்விடுமுறை முடிந்ததையடுத்து நேற்று காலை முதலே ஏராளமானவர்கள் மீண்டும் வெளியூருக்கு புறப்பட்டு சென்றனர். இதற்காக சிறப்பு பஸ்களும் இயக்கபட்டது. இதனால் தென்காசி பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக தென்காசி புதிய பஸ் நிலையத்தில் சென்னை, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பஸ் முழுவதும் நிரம்பி சென்றது.

    இதேபோல் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ற அனைத்து ெரயில்களிலும் மக்கள் போட்டி போட்டு முன்பதி வில்லாத பெட்டிகளில் இடம் பிடித்து பயணம் மேற்கொண்டனர்.

    • புத்தாடை வாங்குவதற்காக நெல்லை நகர கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
    • கடைகளுக்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பொருட்கள் வாங்க வந்திருந்தனர்.

    நெல்லை:

    தீபாவளி பண்டிகை நாளை(திங்கட்கி ழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் இறுதி கட்ட விற்பனை இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் நாளை தீபாவளியை யொட்டி பொதுமக்கள் அதிகாலையில் புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். இதற்காக கடந்த 2 நாட்களாக இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதற்காக நெல்லை நகர கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    கடைசி நாளான இன்றும் ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது.

    மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, வள்ளியூர் உள்ளிட்ட இடங்களில் பஜார் பகுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. இதனால் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக போடப்பட்டு இருந்தனர்.

    கூட்டம் அதிகரிப்பு

    மாநகர பகுதியில் நேற்று நள்ளிரவு வரையிலும் தீபாவளி விற்பனை சூடுபிடித்து காணப்பட்டது. பாளை சமாதானபுரம் மார்க்கெட் முதல் வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, சந்திப்பு, டவுன் ரதவீதிகள் வரை கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.

    ஜவுளிக்கடை மற்றும் பட்டாசு கடைகளில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பொருட்கள் வாங்குவதற்காக வந்திருந்தனர். இதேபோல் பலகார கடைகள், பேக்கரிகள், பேன்சி கடைகள் மற்றும் மளிகை கடைகள் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    போலீஸ் பாதுகாப்பு

    இதனால் பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையொட்டி மாநகர பகுதியில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். குறிப்பாக டவுன் ரதவீதிகள் மற்றும் வண்ணார்பேட்டையில் உயர்கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுதவிர அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். சில இடங்களில் போலீசார் மோட்டார் சைக்கிள்களில் சென்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    பயணிகள் கூட்டம்

    சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரும்பாலானோர் ரெயில் மூலமாக இன்று காலை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். இதனால் அதிகாலை முதலே அங்கும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இதனையொட்டி பட்டாசு ஏதேனும் கொண்டு வருகிறார்களா? என்பதை ரெயில்வே போலீசார் கண்காணித்தனர். வெளியூர்களில் இருந்து வந்தவர்களுக்காக சிறப்பு ரெயில்களும், கூடுதல் பஸ்களும் விடப்பட்டு இருந்தது.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர். அங்கும் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், ஆலங்குளம், தென்காசி, செங்கோட்டை, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆலங்குளத்தில் தென்காசி பிரதான சாலை, அம்பை சாலையில் உள்ள ஜவுளிக்கடைகளில் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தன.

    சங்கரன்கோவில் டவுன் ரதவீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். ராஜபாளையம் சாலை, கழுகுமலை சாலைகளில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட் சாலையில் இன்று காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பிரையண்ட் நகர், அண்ணா நகர் மற்றும் புதிய பஸ் நிலையங்களில் பொதுமக்கள் அலைமோதியதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும் டபுள்யூஜிசி ரோடு, சிவன் கோவில் பகுதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள் சிக்கி தவித்தன. இதேபோல் திருச்செந்தூர், கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை, விளாத்திகுளம், எட்டயபுரம், சாத்தான்குளம், உடன்குடி, ஸ்ரீவைகுண்டம் உள்பட புறநகர் பகுதிகளிலும் பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் வெளி மாவட்ட மக்கள் குடும்பத்தினருடன் தங்கி பல்வேறு இடங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
    • தீபாவளி பண்டிகை கொண்டாட நேற்று இரவு ஈரோடு பஸ் நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மக்கள் இப்போதே தீபாவளி பண்டிகை கொண்டாட தயாராகி வருகின்றனர். பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் தீபாவளி விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதையடுத்து தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு படை எடுக்க மக்கள் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வெளி மாவட்ட மக்கள் குடும்பத்தி னருடன் தங்கி பல்வேறு இடங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகை கொண்டாட நேற்று இரவு ஈரோடு பஸ் நிலையத்தில் நூற்றுக்க ணக்கான மக்கள் குவிந்தனர். மக்கள் சிரமம் இன்றி சொந்த ஊர் செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கமாக இயக்கும் பஸ்களை விட கூடுதலாக 100 சிறப்பு பஸ்கள் நேற்று இரவு முதல் இயக்கப்பட்டன.

    இதனால் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் மக்கள் சிரமம் இன்றி செல்ல ஏதுவாக இருந்தது. இதேபோல் இன்று காலையும் ஈரோடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    வெளியூர் செல்லும் பஸ்களில் குறிப்பாக கோவை, சேலம், கரூர், மதுரை பஸ்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மக்கள் தங்கள் குடும்பத்தி னருடன் சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட சென்ற வண்ணம் இருந்தனர்.

    இதேபோல் இன்று ஈரோடு ெரயில் நிலையத்திலும் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலை மோதியது. அதிகாலை முதலே ெரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. சொந்த ஊர் செல்வதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர்.

    ஈரோடு ரெயில்வே நுழைவுவாயில் பகுதியில் ெரயில்வே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பயணிகள் யாராவது பட்டாசு கொண்டு செல்கி றார்களா? என்று தீவிரமாக ஒவ்வொரு பயணிகளின் உடைமை களை சோதனை செய்து அதன் பிறகே உள்ளே அனுமதித்தனர்.

    மேலும் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ஒவ்வொரு ரெயில்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    தீபாவளி பண்டிகை கொண்டாடும் வகையில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை உள்ள பகுதிகளில் இன்று கூட்டம் கடுமையாக இருந்தது. இதனால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஈரோடு ஜவுளி மார்க்கெட்டிலும் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதனால் விற்பனை சூடு பிடித்தது. இதேபோல் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி.ரோடு போன்ற கடைவீதிகளிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கடந்த ஒரு வாரமாக ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக போலீசார் முன்னச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து அதில் மக்களின் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை களைக்கட்டி உள்ளது.

    • தீபாவளிபண்டிகை கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் கைவரிசை காட்டுவார்கள்.
    • லாரன்ஸ்ரோடு பகுதியில் உயர்கோபுரம் அமைத்து போக்குவரத்து மற்றும் கொள்ளையர்களை கண்காணித்தபடி உள்ளனர்.

    கடலூர்:

    தீப திருநாளாம் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (24-ந் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்ட மக்கள் தீபாவளி புத்தாடை வாங்குவதற்கு குவிந்த வண்ணம் உள்ளனர். கடலூர் மாவட்டம் கிராமங்கள் உள்ளடக்கிய பகுதியாகும். இந்த கிராம மக்கள் எந்த ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றாலும் கடலூர் துறைமுகம் மற்றும் திருப்பாதிரிபுலியூர்தான் வரவேண்டும். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதால் கடலூர் மாவட்ட கிராம மக்கள் திருப்பாதிரிபுலியூருக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் கடலூர் லாரன்ஸ்ரோடு, இம்பீரியல் சாலை, சுப்புராயலுசெட்டி தெரு, நகை கடை வீதிகளில் படையெடுக்கிறார்கள். இதனால் கடலூர் நகர் பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியவண்ணம் உள்ளது. இதன் காரணமாக இம்பீரியல் சாலை, மஞ்சக்குப்பம்மணிக்கூண்டு, நேதாஜி சாலை மற்றும் முக்கிய வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. நேரம் ஆக ஆக மக்கள் அதிகளவில் குவிவதால் இம்பீரியயல் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

    தீபாவளிபண்டிகை கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் கைவரிசை காட்டுவார்கள். இதனை கண்காணிக்க கடலூர் மாவட்டத்தில் 1,600 போலீசார் ரோந்து வருகிறார்கள். அதோடு டிரோன் காமிரா மூலமும் திருடர்கள், செல்ேபான் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்தபடி உள்ளனர். இது தவிர போலீஸ் டி.எஸ்.பி. கரிக்கால்பாரிசங்கர் தலைமையில் திருப்பாதிரிபுலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மேற்பார்வையில் லாரன்ஸ்ரோடு பகுதியில் உயர்கோபுரம் அமைத்து போக்குவரத்து மற்றும் கொள்ளையர்களை கண்காணித்தபடி உள்ளனர். மேலும் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலை ஓர வியாபாரிகளும் துணிகளை விற்பனை செய்ய வந்த வண்ணம் உள்ளனர். இவர்களிடம் துணிரகங்களை வாங்குவதற்கு கிராமமக்கள் ஒட்டு மொத்தமாக குவிவதால் கடலூர் நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. 

    • வாடிப்பட்டி பகுதியில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி கொட்டும் மழையிலும் கோவிலில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
    • சீனிவாச பெருமாள், திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பொன்மலை அடிவாரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சீனிவாச பெருமாள், திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

    அன்னதானத்தை முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் சோனை தலைமை தாங்கி வழங்கினார். கவுன்சிலர்கள் அசோக்குமார், இளங்கோவன், சூர்யா முன்னிலை வகித்தனர்.

    ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நீரேத்தான் நவநீத பெருமாள் கோவில், தாதம்பட்டி மேட்டு பெருமாள் நகர் நீலமேகப்பெருமாள் கோவில், கச்சைகட்டி நீலமேகப்பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை, அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    மாலையில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கூட்டத்தினர் நனைந்தபடி தரிசனம் செய்தனர்.

    ×