என் மலர்
நீங்கள் தேடியது "Air Adventure Show"
- 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்து இருந்தனர்.
- அதிக வெப்பம் காரணமாக குழந்தைகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர்.
சென்னை:
மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகசத்தை பார்க்க 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்து இருந்தனர். இதனால் கடற்கரையில் கூட்டம் அலைமோதியது. விமானங்கள் சீறிப்பாய்ந்த போது பொதுமக்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
கூட்ட நெரிசல் மற்றும் அதிக வெப்பம் காரணமாக குழந்தைகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- குழந்தைகளை தவற விட்டு தவித்த பரிதாபம்.
- மெரினா கடற்கரையில் இன்று கட்டுக்கடங்காத கூட்டம்.
மெரினா கடற்கரையில் காணும் பொங்கல் தினத்தில்தான் மக்கள் அதிக அளவில் வருவார்கள். அப்போது மாலை நேரத்தில் வெயில் ஓய்ந்த பிறகே மக்கள் கூட்டம் காணப்படும்.
ஆனால் இன்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காணும் பொங்கலை மிஞ்சும் அளவுக்கு பொதுமக்கள் வயது வித்தியாசம் இன்றி கடறகரை முழுவதும் திரண்டிருந்ததை காண முடிந்தது.

இதனால் கடற்கரை மணற்பரப்பே தெரியாத அளவுக்கு மெரினா கடற்கரை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. குழந்தைகளை தவற விட்டு தவித்த பரிதாபம்
மெரினா கடற்கரையில் இன்று கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதியது. சாகச நிகழ்ச்சியை கண்டு ரசிப்பதற்காக குடும்பத்தோடு பலரும் வந்திருந்தனர். இவர்களில் பலர் தங்களது குழந்தைகளை தொலைத்து விட்டு கண்ணீருடன் தேடி அலைந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.






