search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crowds of people at"

    • சுற்றுலா தலங்களில் இன்று 3-வது நாளாக மக்கள் குவிந்தனர்.
    • கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களில் இன்று 3-வது நாளாக மக்கள் குவிந்தனர்.

    சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அணை உள்ளது. அதன் அருகே பூங்கா அமைந்துள்ளது.

    இந்த பூங்காவுக்கு சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

    அதே போல் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து அணையை ரசித்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழ் புத்தாண்டு மற்றும் நேற்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள் பவானிசாகர் அணை பூங்காவுக்கு வந்து ரசித்து சென்றனர். கடந்த 2 நாட்களாக அணை பகுதியில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    இந்த நிலையில் 3-வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பவானிசாகர் அணை பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    காலை முதலே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி திருப்பூர், கோவை, சேலம் என தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர்.

    இதை தொடர்ந்து நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

    அணைப் பூங்காவுக்கு தங்கள் குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் அங்கு ஊஞ்சல் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் சறுக்கு விளையாடி குதுகளித்தனர்.

    இதை தொடர்ந்து பொது மக்கள் பூங்காவின் இயற்கை அழகை கண்டு களித்தனர். மேலும் அணையில் கொட்டும் தண்ணீரின் அழகை ரசித்தப்படி சென்றனர்.

    இதையொட்டி அணையின் வெளி பகுதியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அணையை ரசித்த பொதுமக்கள் அங்கு விற்பனை செய்யப்படும் மீன் வகைகளையும் ருசித்தனர்.

    அதே போல் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைளையும் ரோட்டோரம் அமர்ந்து சாப்பிட்டனர்.

    இதனால் இன்று காலை முதலே அணை பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது.

    தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையால் பவானிசாகர் பகுதி மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

    இதே போல் கோபிசெட்டி பாளையம் அடுத்த கொடி வேரி தடுப்பணைக்கு இன்று 3-வது நாளாக பொது மக்கள் அதிகளவில் வந்திருந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் கொடுவேரி தடுப்பணை பகுதியில் இன்றும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    மேலும் ஈரோடு வ.உ.சி. பூங்காவில் இன்று காலை மக்கள் குறைந்து காணப்ப ட்டாலும் நேரம் செல்ல செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரித்தது.

    குடும்பத்துடன் பூங்காவுக்கு வந்த மக்கள் அங்கு ஊஞ்சல், சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர்.

    மேலும் பண்ணாரி யம்மன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன், சென்னிமலை முருகன் கோவில், வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்பட மாவட்டத்தின் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கடந்த 3 நாட்களாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

    • ஈரோடு மாவட்டத்தில் வெளி மாவட்ட மக்கள் குடும்பத்தினருடன் தங்கி பல்வேறு இடங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
    • தீபாவளி பண்டிகை கொண்டாட நேற்று இரவு ஈரோடு பஸ் நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மக்கள் இப்போதே தீபாவளி பண்டிகை கொண்டாட தயாராகி வருகின்றனர். பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் தீபாவளி விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதையடுத்து தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு படை எடுக்க மக்கள் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வெளி மாவட்ட மக்கள் குடும்பத்தி னருடன் தங்கி பல்வேறு இடங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகை கொண்டாட நேற்று இரவு ஈரோடு பஸ் நிலையத்தில் நூற்றுக்க ணக்கான மக்கள் குவிந்தனர். மக்கள் சிரமம் இன்றி சொந்த ஊர் செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கமாக இயக்கும் பஸ்களை விட கூடுதலாக 100 சிறப்பு பஸ்கள் நேற்று இரவு முதல் இயக்கப்பட்டன.

    இதனால் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் மக்கள் சிரமம் இன்றி செல்ல ஏதுவாக இருந்தது. இதேபோல் இன்று காலையும் ஈரோடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    வெளியூர் செல்லும் பஸ்களில் குறிப்பாக கோவை, சேலம், கரூர், மதுரை பஸ்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மக்கள் தங்கள் குடும்பத்தி னருடன் சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட சென்ற வண்ணம் இருந்தனர்.

    இதேபோல் இன்று ஈரோடு ெரயில் நிலையத்திலும் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலை மோதியது. அதிகாலை முதலே ெரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. சொந்த ஊர் செல்வதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர்.

    ஈரோடு ரெயில்வே நுழைவுவாயில் பகுதியில் ெரயில்வே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பயணிகள் யாராவது பட்டாசு கொண்டு செல்கி றார்களா? என்று தீவிரமாக ஒவ்வொரு பயணிகளின் உடைமை களை சோதனை செய்து அதன் பிறகே உள்ளே அனுமதித்தனர்.

    மேலும் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ஒவ்வொரு ரெயில்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    தீபாவளி பண்டிகை கொண்டாடும் வகையில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை உள்ள பகுதிகளில் இன்று கூட்டம் கடுமையாக இருந்தது. இதனால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஈரோடு ஜவுளி மார்க்கெட்டிலும் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதனால் விற்பனை சூடு பிடித்தது. இதேபோல் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி.ரோடு போன்ற கடைவீதிகளிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கடந்த ஒரு வாரமாக ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக போலீசார் முன்னச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து அதில் மக்களின் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை களைக்கட்டி உள்ளது.

    ×