என் மலர்
நீங்கள் தேடியது "tourist spots"
- மெரினா கடற்கரைக்கு பெற்றோருடன் வந்த குழந்தைகளுக்கு இந்த அடையாள பேண்ட் கட்டி விடப்பட்டது.
- மெரினா கடற்கரை அழகுபடுத்தப்பட்டு குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு உபகரணங்களும் அதிக அளவில் அமைக்கப்பட்டு உள்ளன.
சென்னை:
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டது.
இன்று காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மெரினா கடற்கரையில் இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் குடும்பத்தோடு திரண்டனர்.
இதேபோன்று தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் குவிந்தனர். இதன் காரணமாக மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா பகுதிகளுமே களைகட்டி காணப்பட்டது.
இப்படி பொழுதுபோக்கு மையங்களில் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டதால் எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் அறிவுரையின் பேரில் 16 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள், போலீசார் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினர் மூலம் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின்போது பாதுகாப்பு அளிக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக போலீஸ் கட்டுப்பாடு அறைகள் அமைக்கப்பட்டும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் போலீஸ் உதவி மையங்கள் அமைக்கப்பட்டும். அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
மீட்புப்பணிக்காக மோட்டார் படகுகளில் 200-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக போலீஸ் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 போலீசார் கண்காணித்தனர்.
மெரினா கடற்கரையில் 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால், கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். குதிரைப்படையினர் மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய ரோந்து வாகனம் மூலம் போலீசாரால் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்கப்பட்டது.
பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஒரு தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டறை, 3 தற்காலிக போலீஸ் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்டநெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர போலீஸ் மூலம் தயாரிக்கப்பட்ட, கைகளில் கட்டப்படும் பேண்ட், அடையாள அட்டைகள், போலீஸ் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளில் வைக்கப்பட்டிருந்தது.

மெரினா கடற்கரைக்கு பெற்றோருடன் வந்த குழந்தைகளுக்கு இந்த அடையாள பேண்ட் கட்டி விடப்பட்டது.
மெரினா கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் என மொத்தம் 8 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.
மதுபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை. துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜி.எஸ்.டி. ரோடு மற்றும் இதர சாலைகளில் மோட்டார் சைக்கிள் பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது பைக் ரேசை தடுப்பதற்கும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் காலையிலேயே தங்களது குடும்பத்தோடு திரண்டு இருந்தனர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் லயன் சபாரியை காண்பதற்காக நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் டிக்கெட் எடுத்தனர். இதற்காக அவர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க நேர்ந்தது.
பூங்காவை சுற்றி பார்ப்பதற்கான வாகனத்தை பதிவு செய்வதற்கும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கிண்டி சிறுவர் பூங்காவிலும் வரிசையில் நின்று பொதுமக்கள் டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு பூங்காவுக்குள் நுழைந்தனர்.

கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் சிறுவர், சிறுமிகள் தங்களது பெற்றோர்களோடு இணைந்து காணும் பொங்கலை குதூகலத்தோடு கொண்டாடி மகிழ்ந்தனர்.
மெரினா கடற்கரை இப்போது அழகுபடுத்தப்பட்டு குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு உபகரணங்களும் அதிக அளவில் அமைக்கப்பட்டு உள்ளன.
அனைவரையும் கவரும் வகையில் இதய வடவிலான இருக்கைகள், பளிங்கு போன்று வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் இருக்கைகள் ஆகியவைகளும் கடற்கரை மணல் பரப்பில் புதிதாக இடம்பெற்றுள்ளன.
இந்த இருக்கைகளில் அமர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போட்டி போட்டு கொண்டு புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, திருச்சி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் அலைமோதினார்கள். இதைத்தொடர்ந்து அந்தந்த பகுதிகளை சேர்ந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உத்தரவின்பேரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
குறிப்பாக கடற்கரைப் பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்கி உயிரிழந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இப்படி இன்று காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சாலையோர வியாபாரிகள், பாதசாரிகள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர்.
- விடுமுறை தினமான இன்று அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஊட்டியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் ஊட்டி பஸ் நிலையம், பிங்கா் போஸ்ட், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பணி முடிந்து வீடு திரும்பியவா்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவா்கள் அவதிக்கு உள்ளாகினர்.
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஆனாலும் மாலை நேரங்களில் மிதமான குளிருடன் கூடிய காலநிலை நிலவியது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. தொடர்ந்து பிற்பகலில் கட்டபெட்டு, பெட்டட்டி, வெஸ்ட்புரூக், பாண்டியன் பார்க், ஒரசோலை, தாந்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இது மாலை நேரம் வரை தொடர்ந்து நீடித்தது. இதன்காரணமாக அந்த பகுதியில் கடுங்குளிர் நிலவியது. இதன் காரணமாக சாலையோர வியாபாரிகள், பாதசாரிகள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இன்று ஒருநாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. அதன்படி அங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
விடுமுறை தினமான இன்று அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மற்ற சுற்றுலா தலங்கள் வழக்கம் போல திறந்து இருந்தன. அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து, தங்கள் பொழுதை கழித்தனர்.
- உழவர் திருநாளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
- பெருவுடையார் கோயிலில் வழக்கத்தைவிட மக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட முழுவதும் உழவர் திருநாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உழவர் திருநாளையொட்டி, அலங்காரத்துடன் தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த காளைகள், பசுமாடுகள், எருமைகள் உள்ளிட்ட மாடுகளும், ஆடுகளும் அவிழ்த்து விடப்பட்டன. சிறுவர் சிறுமியர்களுக்கு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், சாக்கு ஓட்டம், எலுமிச்சை கரண்டி, பாட்டுப்போட்டி, கவிதை போட்டி, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன.
இதே போன்று இளைஞர்களுக்கு கபடி, மட்டைப்பந்து, ஓட்டப்பந்தயம், சைக்கிள் போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல் போட்டி களும்,பெண்களுக்கு கோ கோ, கும்மியடித்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடைப்பெற்றது. முன்னதாக பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, பெரியவர்களிடம் ஆசி வழங்கி தங்களுக்கு அருகிலுள்ள விளையாட்டு திடல்களில் சென்று உழவர் திருநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி, ெஜயங்கொண்டம் அருகேயுள்ள கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள சுற்றுலா தலமான பெருவுடையார் கோயிலில் வழக்கத்தைவிட மக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
பெல்ஜியம், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்திருந்து காணும் பொங்கலை கொண்டாடினர். இதே போல் திருமானூர் அருகேயுள்ள கரைவேட்டி பறவைகள் சரணாலயத்தில் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அரியலூர் செட்டி ஏரி பூங்கா, கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில், அணைக்கரை, உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு, பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்று காணும் பொங்கலை கொண்டாடினர்.
- சுற்றுலா தலங்களில் இன்று 3-வது நாளாக மக்கள் குவிந்தனர்.
- கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களில் இன்று 3-வது நாளாக மக்கள் குவிந்தனர்.
சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அணை உள்ளது. அதன் அருகே பூங்கா அமைந்துள்ளது.
இந்த பூங்காவுக்கு சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.
அதே போல் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து அணையை ரசித்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழ் புத்தாண்டு மற்றும் நேற்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள் பவானிசாகர் அணை பூங்காவுக்கு வந்து ரசித்து சென்றனர். கடந்த 2 நாட்களாக அணை பகுதியில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
இந்த நிலையில் 3-வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பவானிசாகர் அணை பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
காலை முதலே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி திருப்பூர், கோவை, சேலம் என தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர்.
இதை தொடர்ந்து நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
அணைப் பூங்காவுக்கு தங்கள் குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் அங்கு ஊஞ்சல் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் சறுக்கு விளையாடி குதுகளித்தனர்.
இதை தொடர்ந்து பொது மக்கள் பூங்காவின் இயற்கை அழகை கண்டு களித்தனர். மேலும் அணையில் கொட்டும் தண்ணீரின் அழகை ரசித்தப்படி சென்றனர்.
இதையொட்டி அணையின் வெளி பகுதியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அணையை ரசித்த பொதுமக்கள் அங்கு விற்பனை செய்யப்படும் மீன் வகைகளையும் ருசித்தனர்.
அதே போல் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைளையும் ரோட்டோரம் அமர்ந்து சாப்பிட்டனர்.
இதனால் இன்று காலை முதலே அணை பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது.
தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையால் பவானிசாகர் பகுதி மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
இதே போல் கோபிசெட்டி பாளையம் அடுத்த கொடி வேரி தடுப்பணைக்கு இன்று 3-வது நாளாக பொது மக்கள் அதிகளவில் வந்திருந்தனர்.
தொடர்ந்து அவர்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் கொடுவேரி தடுப்பணை பகுதியில் இன்றும் மக்கள் கூட்டம் அலை மோதியது.
மேலும் ஈரோடு வ.உ.சி. பூங்காவில் இன்று காலை மக்கள் குறைந்து காணப்ப ட்டாலும் நேரம் செல்ல செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரித்தது.
குடும்பத்துடன் பூங்காவுக்கு வந்த மக்கள் அங்கு ஊஞ்சல், சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர்.
மேலும் பண்ணாரி யம்மன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன், சென்னிமலை முருகன் கோவில், வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்பட மாவட்டத்தின் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கடந்த 3 நாட்களாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
- ஊட்டிக்கு வருபவர்கள் மழையால் வெளியில் சென்று சுற்றி பார்க்க முடியாமல் விடுதிக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
- கடும் குளிர் நிலவியதால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு பருவமழை தாமதமாக தொடங்கி உள்ளது.
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் இதமான காலநிலை நிலவி வருகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது.
மழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் வடிந்தோடுகிறது. தாழ்வான இடங்களில் தேங்கி நிற்பதையும் காண முடிகிறது.
இந்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அப்பர் பவானி, அவலாஞ்சி உள்பட அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
தொடர் மழை பெய்து கொண்டே இருந்தால் அணைகள் தங்களது முழு கொள்ளளவை எட்டிவிடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.மஞ்சூர், ஊட்டி, கூட லுார், பந்தலுார், அவலாஞ்சி பகுதிகளில் நள்ளிரவில், 7 இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு மீட்பு குழு, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரிய ஊழியர்கள் சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
கடந்த சில தினங்களாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வரத்து கணிசமாக குறைந்து காணப்படுகிறது. அப்படி வருபவர்கள் மழையால் வெளியில் சென்று சுற்றி பார்க்க முடியாமல் விடுதிக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
ஊட்டி படகு இல்லம் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஊட்டி படகு இல்லத்தில் நிறுத்தப்பட்ட படகுகளில் தண்ணீர் தேங்கியதால், துடுப்பு மற்றும் பெடல் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.
தண்ணீரை வெளியேற்றி படகுகளை சுத்திகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சில மோட்டார் படகு மட்டும் இயக்கப் பட்டன.
இதேபோல் தாவரவியல் பூங்கா உட்பட சுற்றுலா மையங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. கடும் குளிர் நிலவியதால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.






