search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுற்றுலா தலங்களில் குவிந்து காணும் பொங்கலை ெகாண்டாடிய பொதுமக்கள்
    X

    சுற்றுலா தலங்களில் குவிந்து காணும் பொங்கலை ெகாண்டாடிய பொதுமக்கள்

    • உழவர் திருநாளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
    • பெருவுடையார் கோயிலில் வழக்கத்தைவிட மக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட முழுவதும் உழவர் திருநாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உழவர் திருநாளையொட்டி, அலங்காரத்துடன் தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த காளைகள், பசுமாடுகள், எருமைகள் உள்ளிட்ட மாடுகளும், ஆடுகளும் அவிழ்த்து விடப்பட்டன. சிறுவர் சிறுமியர்களுக்கு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், சாக்கு ஓட்டம், எலுமிச்சை கரண்டி, பாட்டுப்போட்டி, கவிதை போட்டி, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன.

    இதே போன்று இளைஞர்களுக்கு கபடி, மட்டைப்பந்து, ஓட்டப்பந்தயம், சைக்கிள் போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல் போட்டி களும்,பெண்களுக்கு கோ கோ, கும்மியடித்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடைப்பெற்றது. முன்னதாக பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, பெரியவர்களிடம் ஆசி வழங்கி தங்களுக்கு அருகிலுள்ள விளையாட்டு திடல்களில் சென்று உழவர் திருநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி, ெஜயங்கொண்டம் அருகேயுள்ள கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள சுற்றுலா தலமான பெருவுடையார் கோயிலில் வழக்கத்தைவிட மக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

    பெல்ஜியம், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்திருந்து காணும் பொங்கலை கொண்டாடினர். இதே போல் திருமானூர் அருகேயுள்ள கரைவேட்டி பறவைகள் சரணாலயத்தில் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அரியலூர் செட்டி ஏரி பூங்கா, கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில், அணைக்கரை, உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு, பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்று காணும் பொங்கலை கொண்டாடினர்.


    Next Story
    ×