search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்
    X

    கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

    சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்

    • சுற்றுலா தலங்களில் இன்று 3-வது நாளாக மக்கள் குவிந்தனர்.
    • கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களில் இன்று 3-வது நாளாக மக்கள் குவிந்தனர்.

    சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அணை உள்ளது. அதன் அருகே பூங்கா அமைந்துள்ளது.

    இந்த பூங்காவுக்கு சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

    அதே போல் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து அணையை ரசித்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழ் புத்தாண்டு மற்றும் நேற்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள் பவானிசாகர் அணை பூங்காவுக்கு வந்து ரசித்து சென்றனர். கடந்த 2 நாட்களாக அணை பகுதியில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    இந்த நிலையில் 3-வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பவானிசாகர் அணை பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    காலை முதலே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி திருப்பூர், கோவை, சேலம் என தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர்.

    இதை தொடர்ந்து நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

    அணைப் பூங்காவுக்கு தங்கள் குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் அங்கு ஊஞ்சல் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் சறுக்கு விளையாடி குதுகளித்தனர்.

    இதை தொடர்ந்து பொது மக்கள் பூங்காவின் இயற்கை அழகை கண்டு களித்தனர். மேலும் அணையில் கொட்டும் தண்ணீரின் அழகை ரசித்தப்படி சென்றனர்.

    இதையொட்டி அணையின் வெளி பகுதியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அணையை ரசித்த பொதுமக்கள் அங்கு விற்பனை செய்யப்படும் மீன் வகைகளையும் ருசித்தனர்.

    அதே போல் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைளையும் ரோட்டோரம் அமர்ந்து சாப்பிட்டனர்.

    இதனால் இன்று காலை முதலே அணை பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது.

    தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையால் பவானிசாகர் பகுதி மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

    இதே போல் கோபிசெட்டி பாளையம் அடுத்த கொடி வேரி தடுப்பணைக்கு இன்று 3-வது நாளாக பொது மக்கள் அதிகளவில் வந்திருந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் கொடுவேரி தடுப்பணை பகுதியில் இன்றும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    மேலும் ஈரோடு வ.உ.சி. பூங்காவில் இன்று காலை மக்கள் குறைந்து காணப்ப ட்டாலும் நேரம் செல்ல செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரித்தது.

    குடும்பத்துடன் பூங்காவுக்கு வந்த மக்கள் அங்கு ஊஞ்சல், சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர்.

    மேலும் பண்ணாரி யம்மன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன், சென்னிமலை முருகன் கோவில், வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்பட மாவட்டத்தின் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கடந்த 3 நாட்களாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

    Next Story
    ×