search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus-rail stations"

    • ஈரோடு மாவட்டத்தில் வெளி மாவட்ட மக்கள் குடும்பத்தினருடன் தங்கி பல்வேறு இடங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
    • தீபாவளி பண்டிகை கொண்டாட நேற்று இரவு ஈரோடு பஸ் நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மக்கள் இப்போதே தீபாவளி பண்டிகை கொண்டாட தயாராகி வருகின்றனர். பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் தீபாவளி விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதையடுத்து தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு படை எடுக்க மக்கள் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வெளி மாவட்ட மக்கள் குடும்பத்தி னருடன் தங்கி பல்வேறு இடங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகை கொண்டாட நேற்று இரவு ஈரோடு பஸ் நிலையத்தில் நூற்றுக்க ணக்கான மக்கள் குவிந்தனர். மக்கள் சிரமம் இன்றி சொந்த ஊர் செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கமாக இயக்கும் பஸ்களை விட கூடுதலாக 100 சிறப்பு பஸ்கள் நேற்று இரவு முதல் இயக்கப்பட்டன.

    இதனால் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் மக்கள் சிரமம் இன்றி செல்ல ஏதுவாக இருந்தது. இதேபோல் இன்று காலையும் ஈரோடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    வெளியூர் செல்லும் பஸ்களில் குறிப்பாக கோவை, சேலம், கரூர், மதுரை பஸ்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மக்கள் தங்கள் குடும்பத்தி னருடன் சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட சென்ற வண்ணம் இருந்தனர்.

    இதேபோல் இன்று ஈரோடு ெரயில் நிலையத்திலும் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலை மோதியது. அதிகாலை முதலே ெரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. சொந்த ஊர் செல்வதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர்.

    ஈரோடு ரெயில்வே நுழைவுவாயில் பகுதியில் ெரயில்வே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பயணிகள் யாராவது பட்டாசு கொண்டு செல்கி றார்களா? என்று தீவிரமாக ஒவ்வொரு பயணிகளின் உடைமை களை சோதனை செய்து அதன் பிறகே உள்ளே அனுமதித்தனர்.

    மேலும் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ஒவ்வொரு ரெயில்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    தீபாவளி பண்டிகை கொண்டாடும் வகையில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை உள்ள பகுதிகளில் இன்று கூட்டம் கடுமையாக இருந்தது. இதனால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஈரோடு ஜவுளி மார்க்கெட்டிலும் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதனால் விற்பனை சூடு பிடித்தது. இதேபோல் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி.ரோடு போன்ற கடைவீதிகளிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கடந்த ஒரு வாரமாக ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக போலீசார் முன்னச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து அதில் மக்களின் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை களைக்கட்டி உள்ளது.

    ×