என் மலர்
நீங்கள் தேடியது "Crowded"
- பஸ்களில் தொங்கி செல்லும் பயணிகளுக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆனால் மிகவும் குறைந்த அளவு பஸ்கள் இயக்கபடுவதால் பயணிகள் அதிக கூட்டநெரிசலுடன் பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் இருந்து சிவகங்கைக்கு தினமும் கல்லூரி மாணவ-மாணவிகள், அரசுஅலுவலர்கள், நோயாளிகள் என ஏராளமான பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் மிகவும் குறைந்த அளவு பஸ்கள் இயக்கபடுவதால் பயணிகள் அதிக கூட்ட நெரிசலுடன் பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. படிகளில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் தொற்றி கொண்டு செல்லும் நிலை உள்ளது.
இதேபோல் மானாமதுரை வழியாக திருச்சி வரை குறைந்த அளவில் பஸ்கள் இயக்கபடுவதால் மானா மதுரையில் ஏறும் பயணிகள் திருச்சி வரை நின்று செல்லும் நிலைஉள்ளது. திருச்சியில் இருந்து மானாமதுரை வழியாக இரவு நேரத்தில் பரமக்குடி ராமேசுவரம் சென்ற அரசுபஸ்களும் நிறுத்த பட்டால் மானாமதுரை பயணிகள் திருச்சியில் இருந்து மதுரை வந்து சுற்றி வரும் நிலை உள்ளது.
எனவே மானாமதுரை சிவகங்கை இடையே கூடுதல் பஸ்களும் மானாமதுரை வழியாக திருச்சி க்கு கூடுதல் பஸ்களை இயக்கவும், மானாமதுரை வழியாக திருச்சியில் இருந்து ராமேசுவரம் பரமக்குடி செல்லும் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மானாமதுரை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை:
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பஸ்களை இயக்குகிறது.
நேற்று முன்தினம் முதல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. முதல் நாளில் மட்டும் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 127 பேர் பயணம் செய்துள்ளார்கள்.
நாளை (திங்கள்) வரை சுமார் 7 லட்சம் பேர் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதை தினமும் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.
கோயம்பேடு பேருந்து நிலையம் தொடங்கி ஆம்னி பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர், தாம்பரம் சானிடோரியம், பூவிருந்தவல்லி ஆகிய பேருந்து நிலையங்கள் மற்றும் சுங்கச் சாவடிகளையும் நள்ளிரவு வரை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
6 லட்சம் பயணிகள் இந்த பண்டிகை காலங்களில் பயணித்திட ஏதுவாக அனைத்து விதமான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் குறிப்பாக, பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை குறைக்கின்ற வகையில் போக்குவரத்துத் துறையை சார்ந்த அலுவலர்களும், காவல்துறையினரும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் பேருந்துகள் எந்தவித தாமதமுமின்றி செல்லுகின்ற வகையில் சிறப்பு வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு போக்கு வரத்து நெரிசல் உடனடியாக சரி செய்யப்படுகிறது. மேலும் பயணிகள் தெரிவிக்கும் புகார் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு விரைவு போக்கு வரத்துக் கழக இயக்குநர் பாஸ்கரன், மாநகர் போக்குவரத்துக் கழக இயக்குநர் அன்பு ஆபிரகாம் ஆகியோர் உடன் இருந்தனர்.
அரசு பல்வேறு ஏற்பாடுகள் செய்தும் போக்குவரத்து நெரிசலில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் விழி பிதுங்குகிறது.
பஸ்கள் மட்டுமின்றி கார்களிலும் பலர் ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு சுங்க சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. #Diwali
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நேரு பூங்கா-சென்டிரல், ஏ.ஜி.டி.எம்.எஸ்.-சின்னமலை இடையே மெட்ரோ ரெயில் சேவை நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதையொட்டி, சோதனை அடிப்படையில் நேற்று முன்தினமும், நேற்றும் இலவச பயணம் செய்ய மெட்ரோ ரெயில் நிர்வாகம் அனுமதித்தது.

இதனால் நேற்று மெட்ரோ ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தற்போது கோடை விடுமுறையாக இருப்பதால், பலர் ஆர்வமுடன் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் நீண்ட வரிசையில் நின்று பயணிகள் மெட்ரோ ரெயிலில் ஏறி பயணம் செய்தனர்.
அதேபோல், சில ரெயில் நிலையங்களில் ஏறி, இறங்குவதில் பயணிகள் திக்குமுக்காடினார்கள். அந்த அளவுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பெற்றோருடன் வந்திருந்த குழந்தைகள், சிறுவர் மற்றும் சிறுமிகள் குதூகலத்துடன் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ததை பார்க்க முடிந்தது.
இலவச பயணம் என்பதால், பலரும் ஒரு முறைக்கு பல முறை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். சென்டிரலில் இருந்து விமானநிலையம், பரங்கிமலைக்கும், ஏ.ஜி.டி.எம்.எஸ்.-ல் இருந்து விமான நிலையத்துக்கும் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணத்தை மேற்கொண்டனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வந்து செல்வதற்கு ஏதுவான வசதிகளுடன் மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களில் இருப்பது, வெளிநாடுகளில் இருப்பது போன்ற அனுபவத்தை தருவதாக பலரும் தெரிவித்தனர்.

இதுகுறித்து மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த பயணிகள் சிலர் கூறியதாவது:-
தேனாம்பேட்டையை சேர்ந்த அக்ரிதி:-
மெட்ரோ ரெயில் சேவை அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் எதிர்பார்த்ததை விட ரொம்ப அழகாய் வடிவமைத்து இருக்கிறார்கள். சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள ரெயில் நிலையங்கள் ஒவ்வொன்றும் விமான நிலைய தோற்றத்தை போலவே இருக்கிறது.
இதில் பயணம் செய்வதால் நேரம் மிச்சமாகிறது. நாங்கள் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்வது வழக்கம். அந்தவகையில் தேனாம்பேட்டையில் இருந்து விமானநிலையத்துக்கு காரில் செல்வோம். போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்போம். அது இனிமேல் எங்களுக்கு தேவை இருக்காது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல், ‘குளு குளு’ வசதியுடன் விமானநிலையத்துக்கு செல்ல அருமையான வழியை மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஏற்படுத்தி தந்து இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சவுகார்பேட்டையை சேர்ந்த மகாலட்சுமி:-
என் அப்பாவுடன் வந்தேன். முதல் முறையாக மெட்ரோ ரெயிலில் பயணிக்கிறேன். இந்த பயணம் வியப்பை ஏற்படுத்தியது. நான் இப்படி இருக்கும் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. சாதாரணமான மின்சார ரெயில் போல தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை. எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்துவிட்டேன்.
இதில் பயணம் செய்தால், சென்னையையே ஒரு முறை சுற்றி வந்தது போல் இருக்கிறது. சுரங்கப்பாதையில் ரெயில் செல்லும்போது ரொம்ப திரில்லாக இருந்தது. கட்டணத்தை கொஞ்சம் குறைத்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வேளச்சேரியை சேர்ந்த நாராயணன்:-
மெட்ரோ ரெயில் பயணம் சூப்பராக இருந்தது. நான் தினமும் வேளச்சேரியில் இருந்து தேனாம்பேட்டைக்கு வேலைக்காக வருவேன். இனி கிண்டி வரை வந்து, அங்கிருந்து மெட்ரோ ரெயிலில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் ஏ.ஜி.டி.எம்.எஸ் ரெயில் நிலையத்தில் இறங்கி பணிக்கு செல்வேன்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயணிக்க ஏதுவான சேவையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அளித்து இருக்கிறது. கட்டணம் அதிகமாக இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் பயணிக்க வேண்டும் என்பதால் அதை கொஞ்சம் குறைக்கலாம். மற்றபடி இதில் குறை சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.