search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசி கடைசி சனிக்கிழமை முடிந்ததால் கடலூர் துறைமுகத்தில் மீன்கள்  வாங்க குவிந்த பொதுமக்கள்
    X

    கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த பொது மக்களை படத்தில் காணலாம்.

    புரட்டாசி கடைசி சனிக்கிழமை முடிந்ததால் கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

    • கடலூர் துறைமுகம் கடந்த பல நாட்களாக பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது
    • நெத்திலி மீன் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    புரட்டாசி மாதம் பெரு மாளுக்கு உகந்த மாதம் என்பதால் பொதுமக்கள் விரத முறையை கடைப் பிடித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று கடைசி வார சனிக்கிழமை முடிந்த நிலையில் இன்று காலை முதல் கடலூர் துறைமுகம் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. தங்களுக்கு தேவையான மீன் மற்றும் இறைச்சிகளை வாங்கி சென்றனர். கடலூர் துறைமுகம் கடந்த பல நாட்களாக பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட் டது.இன்று அதிகாலை 3 மணி முதல் வியாபாரி களும், பொதுமக்களும் ஏராளமான அளவில் அங்கு குவிந்தனர். மேலும் தங்களுக்கு தேவையான மீன் வகைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர்.

    இதில் வஞ்சிரம் கிலோ 700 ரூபாய்க்கும், சங்கரா மீன் 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரைக்கும், பன்னி சாத்தான் மீன் 350 ரூபாய்க்கும், பாறை மீன் 350 ரூபாய்க்கும், கனவா வகை மீன்கள் 250 ரூபாய்க்கும், நெத்திலி மீன் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்கள் விலை சற்று குறைவாக விற்பனை செய்யப்பட்டது.

    Next Story
    ×