search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crowds of people"

    • ஈரோடு பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • முன்பதிவு இல்லாத பெட்டிகள் நிரம்பி வழிந்தன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வர்கள் இங்கு பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைகள் படிப்புக்காக, தொழிலு க்காக, வேலைக்காக சொந்த ஊரைவிட்டு ஈரோடு மாவ ட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இவ்வாறு வேறு மாவட்ட ங்களை சேர்ந்தவர்கள் தொடர் விடுமுறை கார ணமாக சொந்த ஊரை நோக்கி படையெடுப்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால் ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காண ப்படும். தற்போது சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை வருகிறது.

    அதாவது சனி, ஞாயிறு, திங்கட்கிழமை சரஸ்வதி பூஜை விடுமுறை, செவ்வா ய்க்கிழமை விஜயதசமி விடுமுறை என தொடர்ந்து 4 4 நாட்கள் விடுமுறை வருகிறது

    இதையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் படை எடுக்கத் தொடங்கியு ள்ளனர். நேற்று மாலை ஈரோடு பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    குறிப்பாக கோவை, சேலம், மதுரை, கரூர் செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. திருநெல்வேலி, சென்னை, நாகர்கோவில் போன்ற தொலைதூர பயணத்திற்கு மக்கள் முன் பதிவு செய்திருந்தனர்

    இதனால் அனைத்து பஸ்களும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. மக்கள் குடும்பம் குடும்பமாக சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் இருந்தனர். வார இறுதி நாட்களில் பயணிகள் சிரமமின்றி செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 52 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதே போல் ஈரோடு ரெயில் நிலையத்தில் வழக்க த்தை விட இன்று காலை பயணிகள் கூட்டம் அதி கமாக இருந்தது. ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகள் எந்த ஒரு சிரம மின்றி தங்கள் குடும்பத்துடன் சென்றனர்.

    முன் பதிவு செய்யாத பயணிகள் ெரயி லில் இடம் பிடிக்க போட்டா போட்டி போட்ட னர். குறிப்பாக திருநெ ல்வேலி, சென்னை, மதுரை செல்லும் ெரயி ல்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்ப ட்டது.

    முன்பதிவு இல்லாத பெட்டிகள் நிரம்பி வழிந்தன.

    • மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை அளிக்க அதிகளவில் பொதுமக்கள் குவிந்தனர்.
    • கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் வாரந் தோறும் திங்கட்கிழமை குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் தங்களுக்கு முதியோர் பணம், பட்டா, குடும்ப அட்டை மற்றும் பிரச்சினை களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுப்பார்கள்.

    இந்த மனு மீது அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளை கலெக்டர் நேரில் அழைத்து பேசி உடனடியாக தகுதியு டைய மனுக்களுக்கு நட வடிக்கைகள் எடுக்க வலி யுறுத்துவார்.இதன் காரணமாக திங்கட்கிழமை களில் கலெக்டர் அலுவல கத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 15-ந் தேதி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 கலைஞர் உரிமை தொகை வழங்கிட ஆணை பிறப்பித்து அதை நிறை வேற்றும் வகையில் ஒவ்வொரு குடும்ப தலைவி களுக்கும் அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப் பட்டது.

    இந்த உரிமை தொகை கிடைக்காத நபர்கள் தங்கள் அருகே உள்ள இ-சேவை மையத்தில் மேல்முறையீடு மனுக்கள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் இன்று (திங்கட்கிழமை) மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்திருந்தனர். இதில் பெரும்பாலும் உரிமை தொகை தொடர்பான மனுக்களாக இருந்தது. மனுக்களை பெற்று கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.

    • நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
    • நேற்று முன்தினம் மதியம் முதல் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    சேலம்:

    நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முதல் நாளை வரை என 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் முதல்...

    மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுப முகூர்த்த நாள் ஆகும். இதனால் சேலத்தில் வசிக்கும் வெளியூர்களை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் முதல் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றனர். பொதுமக்கள் வசதிக்காக சேலத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    நேற்று முன்தினம் மதியம் முதல் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பின்னர் இரவில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பஸ்களில் இடம் பிடிப்பதற்காக பயணிகள் ஒருவரையொருவர் முண்டியடித்து ஏறினர்.

    ரெயில்களில் கூட்டம் அலைமோதியது

    இதேபோல் சேலம் வழியாக வெளியூர்களுக்கு சென்ற ரெயில்களிலும் நேற்று முன்தினம் மாலை முதல் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ரெயிலில் முன்பதிவு இல்லாத ெபாது பெட்டிகளிலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்று நள்ளிரவு 1 மணி வரை பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது.

    அதேப்போல் ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் வெளியூரில்களில் இருந்து சேலத்திற்கு வந்த பொதுமக்கள் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது.

    தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சேலத்தில் இருந்து வெளியூருக்கு செல்வோர் எண்ணிக்கையும், வெளியூர்களில் இருந்து சேலத்திற்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்தப்படி இருந்தது.

    குறிப்பாக இன்று சேலம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் குவிந்தனர். வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    குறிப்பாக சென்னை, வேலூர், விழுப்புரம், திருச்சி, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அதிகப்படியான மக்கள் பயணம் செய்தனர்.

    போக்குவரத்து நெரிசல்

    இதைத்தவிர விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை யொட்டி பொருட்கள் வாங்குவ தற்காக சேலம் டவுன் ரெயில் நிலையம், ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்தபடி இருந்தனர். அதே போல் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ரெயில்கள், பஸ்கள் மூலமாக சேலம் வந்தபடி இருந்தனர்.

    இதேபோல் கொளத்தூர், மேட்டூர், மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூர், காடையாம்பட்டி, தொப்பூர், சங்ககிரி, எடப்பாடி, கெங்கவல்லி, நங்கவள்ளி, ஏற்காடு, ஆத்தூர், தலைவாசல், வீரபாண்டி, வீராணம், வாழப்பாடி, அயோத்தியாப் பட்டணம் உள்பட உள்ளூர் பகுதி மக்களும் விநாயகர் சதுர்த்தியை உற்சாகமாக கொண்டாடுவதற்கு பொருட்கள் வாங்கவும், வெளியூர்களுக்கு செல்லவும் பொதுமக்கள் குவிந்ததால் சுவர்ணபுரி, மெய்யனூர் ரோடு, புதிய பஸ்நிலையம், சேலம் 4 ரோடு, டி.வி.எஸ் பஸ் நிறுத்தம், கடைவீதி, பழைய பஸ் நிலையம், 5 ரோடு, சாரதா கல்லூரி சாலை, அஸ்தம்பட்டி, குகை, அம்மாப்பேட்டை, செவ்வாய்ப்பேட்டை, லீ பஜார், சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஒவ்வொரு வாகனங்களும் மெதுவாக ஊர்ந்து சென்றது.

    கண்காணிப்பு

    போலீசார் வாகன நெரிசலை கட்டுப்படுத்தியும், கண்காணித்தப்படியும் உள்ளனர். கூட்டம் அதிக மாக உள்ள இடங்களில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
    • நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தில் ஈடுபடும் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் இந்த தைப்பொங்கலின்போது அனைத்து காய்கறிகளும் படைத்து புத்தாடைகள் உடுத்தி குடும்பத்தினர் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.

    நெல்லை:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    அலைமோதும் கூட்டம்

    நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தில் ஈடுபடும் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் இந்த தைப்பொங்கலின்போது அனைத்து காய்கறிகளும் படைத்து புத்தாடைகள் உடுத்தி குடும்பத்தினர் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் பண்டிகைக்கான பொருட்கள் வாங்குவதற்கு மார்க்கெட்டுகள், பலசரக்கு கடைகள், உழவர் சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    சீர்வரிசை பொருட்கள்

    குறிப்பாக தலைப்பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர்வரிசை கடந்த 2 நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விறகு அடுப்பு, அடுப்புக்கட்டி, மண்பானைகள், கரும்பு, பனை ஓலைகள், பனங்கிழங்கு, இனிப்பு வகைகள் போன்றவற்றின் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.

    டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட் சாலை அதிகாலை முதல் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அந்த சாலை முழுவதிலும் வியாபாரிகள் கரும்பு, காய்கறிகள், மஞ்சள் குலைகள் உள்ளிட்டவற்றை அடுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மார்க்கெட்-கடைகள்

    நெல்லை டவுன் ரதவீதிகள், பாளை மகாராஜாநகர் உழவர் சந்தை, பாளை காந்தி மார்க்கெட், மேலப்பாளையம் உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் காய்கறி விற்பனை சூடுபிடித்தது. கிழங்கு வகைகள், காய்கறி வகைகள் உள்ளிட்டவற்றை சீர்வரிசை பொருட்களாக வழங்க வேண்டும் என்பதால் பெரும்பாலானோர் 2 கிலோ முதல் 5 கிலோ வரை மொத்தமாக வாங்கி சென்றனர்.

    இதேபோல மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பல சரக்குகடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    காய்கறிகள் தட்டுப்பாடு

    மார்க்கெட்டுகளில் இன்று ஒரு கிலோ வெள்ளை கத்தரிக்காய் ரூ.100 முதல் ரூ.130 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பச்சை நிற கத்தரிக்காய் கிலோ ரூ.60 வரை விற்கப்பட்டது. முருங்கைக்காய் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இன்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.140 முதல் ரூ.200 வரையிலும் விற்பனையானது. பெரும்பாலான இடங்களில் கத்தரிக்காய், முருங்கைக்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

    நெல்லையில் இன்று மண்பானைகள் அளவு வாரியாக ரூ.500 வரையிலும், பஞ்சவர்ண பானைகள் ரூ.800 வரையிலும், 3 அடுப்புக்கட்டிகள் ரூ.150 வரையிலும் விற்பனையாகிறது. 25 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.60 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    மஞ்சள் குலை ஒரு ஜோடி ரூ.25 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. 10 எண்ணிக்கை கொண்ட கரும்பு கட்டு ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கரும்பு ரூ.40 வரை விற்பனையாகிறது.

    காய்கறிகள்கிலோ(ரூ.)

    தக்காளி30

    கேரட் 55

    கத்தரிக்காய்130

    சேமங்கிழங்கு90

    வள்ளிகிழங்கு100

    சிறுகிழங்கு60

    நெல்லிக்காய்80

    பிடிகிழங்கு150

    உள்ளி100

    வெண்டைக்காய் 80

    அவரைக்காய்80

    சீனி அவரை60

    பீன்ஸ் 80

    நாட்டு மாங்காய் 90

    மிளகாய்80

    பூசணிக்காய் 25

    உருளைக்கிழங்கு 35

    சவ்சவ்25

    • ஈரோடு ஜவுளி சந்தைகளிலும் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.
    • இதனால் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக போலீசார் சார்பில் பாதுகாப்பு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 15 நாட்களை இருப்பதால் தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகி றார்கள். புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக மக்கள் தீபாவளியை வரவேற்பார்கள்.

    இந்நிலையில் தீபாவளி க்கு துணிமணிகள் வாங்க ஈரோடு கடை வீதிகளில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    குறிப்பாக மணிக்கூண்டு முதல் பன்னீர்செல்வம் பார்க் வரை சாலையின் இருபுறமும் ஏராளமான ஜவுளிக்கடைகள் உள்ளன. இதேப்போல ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி. ரோடு வீதிகளில் ஏரா ளமான ஜவுளிக்கடைகள் நகை கடைகள் உள்ளன.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் கடந்த சில நாட்களாக துணிமணிகளை வாங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இன்று ஞாயிற்று க்கிழமை என்பதால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே இருந்தது. ஜவுளிக் கடைகளில் மக்கள் போட்டி கொண்டு துணி களை வாங்கி சென்றனர்.

    ஈரோடு ஜவுளி சந்தைகளிலும் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது. மற்ற இடங்களை காட்டிலும் இங்கு ஜவுளி விலை குறைவாக இருப்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    இதனால் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை கூட்ட நெரிசலால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிக மாகவே காணப்பட்டது. இன்னும் ஒரு வாரத்தில் பட்டாசு விற்பனையும் சூடு வைக்க தொடங்கும் என்பதால் இந்த பகுதிகளில் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்படும்.

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக போலீசார் சார்பில் பாதுகாப்பு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    காலாண்டு தேர்வு முடிந்து நாளை 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதால் ஈரோடு பஸ் நிலையம், ெரயில் நிலையங்களில் வழக்கத்தை விட இன்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஈரோடு வழியாக செல்லும் அனைத்து ெரயில்களிலும் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. சொந்த ஊருக்கு சென்ற அனைவரும் மீண்டும் ஈரோடு நோக்கி திரும்பி வருகின்றனர்.

    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த காய்ச்சல் சளி, போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்
    • குழந்தைகள் அவர்களது பெற்றோர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    கடலூர்:

    தமிழக முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் அதிகமாக பரவி வருகிறது. இதனால் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதுகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த காய்ச்சல் சளி, போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை வழக்கத்தை விட தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் தற்போது குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அவர்களது பெற்றோர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனால் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது. இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் பெரியவர்களும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர்களும் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை பெற்று செல்லும் நிலை கடலூரில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் நிலவியுள்ளது.

    இதனையடுத்து சுகாதாரத்துறை டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் கடலூரில் பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் சிறப்பு முகம் மூலம் பொது மக்களுக்கு காய்ச்சல் சளி போன்றவை இருக்கிறதா என்பதை பரிசோதித்து அதற்கு சிகிச்சை மற்றும் இந்த காய்ச்சல் சளி பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து கணக்கு எடுத்து வருகின்றனர்.

    மேலும் நகராட்சி பேரூராட்சி தூய்மை பணியா ளர்கள் அனை வரும் தெருக்களிலும் வீதிகளிலும் கொசுவை ஒழிக்கும் விதமாக கொசு மருந்து அடிக்கவும் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட மக்களின் நலன் காக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும் மற்றும் பரவி வரும் காய்ச்சலை ஒழிக்க சுகாதாரத் துறை மாவட்ட நிர்வாகம் இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர். 

    • மக்கள் ஆயிரக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் திரண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தால் மட்டுமே காய்ச்சலின் வீரியம் குறைந்து வருகின்றது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தற்போது வழக்கத்தை விட அதிக அளவில் காய்ச்சல் பரவி உடல்நிலை பாதிக்கப்பட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் திரண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் பரவி வருகின்றது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடந்த சில தினங்களாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் பெரும்பாலானோருக்கு வரும் காய்ச்சல் உடனடியாக சரியாக வில்லை.

    அதற்கு மாறாக காய்ச்சல் காரணமாக பரிசோதனை மேற்கொண்டால் பலருக்கு வைரல், டைபாய்டு, டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சிலருக்கு என்ன காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது என்பது தெரியாமல் தொடர்ந்து சிகிச்சை பெற்று மாத்திரை உட்கொண்டு வருவதை காண முடிகிறது. மேலும் தற்போது பரவக்கூடிய இந்த காய்ச்சல் குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்கு மேலாக காய்ச்சலின் வீரியம் குறையாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தால் மட்டுமே காய்ச்சலின் வீரியம் குறைந்து வருகின்றது.

    இது மட்டும் இன்றி ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் வீட்டில் உள்ள அனைவருக்கும் எளிதாக காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் சற்று பீதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்தில் தற்போது சில தினங்களாக தொடர் மழையும், காலை நேரங்க ளில் வெயில் அடித்து வருவதால் சீதோசனம் மாற்றம் காரணமாக இந்த காய்ச்சல் பரவுகிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தெரியாமல் மக்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

    இது மட்டும் இன்றி காய்ச்சல் ஏற்பட்ட வர்களுக்கு சளி, இரும்பல் போன்ற நோய்களும் ஏற்பட்டு அவதியடைந்து வருவதை யும் காணமுடிகிறது. இந்த நிலையில் இன்று காலை கடலூர் அரசு மருத்துவ மனையில் காய்ச்சல் ஏற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் நின்று டோக்கன் பெற்றுக் கொண்டு சிகிச்சை க்காக காத்துக் கொண்டிருந்ததை காண முடிந்தது. மேலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் இதுபோன்ற காய்ச்சல் திடீரென்று அதிகரித்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருவதை தனி கவனம் செலுத்தி அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து குடிக்கும் தண்ணீரில் பிரச்சனையா? அல்லது இதற்கு வேறு ஏதேனும் காரணமா? என்பதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×