search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு பஸ்-ரெயில் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
    X

    ஈரோடு பஸ்-ரெயில் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

    • ஈரோடு பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • முன்பதிவு இல்லாத பெட்டிகள் நிரம்பி வழிந்தன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வர்கள் இங்கு பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைகள் படிப்புக்காக, தொழிலு க்காக, வேலைக்காக சொந்த ஊரைவிட்டு ஈரோடு மாவ ட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இவ்வாறு வேறு மாவட்ட ங்களை சேர்ந்தவர்கள் தொடர் விடுமுறை கார ணமாக சொந்த ஊரை நோக்கி படையெடுப்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால் ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காண ப்படும். தற்போது சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை வருகிறது.

    அதாவது சனி, ஞாயிறு, திங்கட்கிழமை சரஸ்வதி பூஜை விடுமுறை, செவ்வா ய்க்கிழமை விஜயதசமி விடுமுறை என தொடர்ந்து 4 4 நாட்கள் விடுமுறை வருகிறது

    இதையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் படை எடுக்கத் தொடங்கியு ள்ளனர். நேற்று மாலை ஈரோடு பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    குறிப்பாக கோவை, சேலம், மதுரை, கரூர் செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. திருநெல்வேலி, சென்னை, நாகர்கோவில் போன்ற தொலைதூர பயணத்திற்கு மக்கள் முன் பதிவு செய்திருந்தனர்

    இதனால் அனைத்து பஸ்களும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. மக்கள் குடும்பம் குடும்பமாக சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் இருந்தனர். வார இறுதி நாட்களில் பயணிகள் சிரமமின்றி செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 52 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதே போல் ஈரோடு ரெயில் நிலையத்தில் வழக்க த்தை விட இன்று காலை பயணிகள் கூட்டம் அதி கமாக இருந்தது. ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகள் எந்த ஒரு சிரம மின்றி தங்கள் குடும்பத்துடன் சென்றனர்.

    முன் பதிவு செய்யாத பயணிகள் ெரயி லில் இடம் பிடிக்க போட்டா போட்டி போட்ட னர். குறிப்பாக திருநெ ல்வேலி, சென்னை, மதுரை செல்லும் ெரயி ல்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்ப ட்டது.

    முன்பதிவு இல்லாத பெட்டிகள் நிரம்பி வழிந்தன.

    Next Story
    ×