search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pongal items"

    • தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
    • நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தில் ஈடுபடும் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் இந்த தைப்பொங்கலின்போது அனைத்து காய்கறிகளும் படைத்து புத்தாடைகள் உடுத்தி குடும்பத்தினர் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.

    நெல்லை:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    அலைமோதும் கூட்டம்

    நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தில் ஈடுபடும் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் இந்த தைப்பொங்கலின்போது அனைத்து காய்கறிகளும் படைத்து புத்தாடைகள் உடுத்தி குடும்பத்தினர் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் பண்டிகைக்கான பொருட்கள் வாங்குவதற்கு மார்க்கெட்டுகள், பலசரக்கு கடைகள், உழவர் சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    சீர்வரிசை பொருட்கள்

    குறிப்பாக தலைப்பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர்வரிசை கடந்த 2 நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விறகு அடுப்பு, அடுப்புக்கட்டி, மண்பானைகள், கரும்பு, பனை ஓலைகள், பனங்கிழங்கு, இனிப்பு வகைகள் போன்றவற்றின் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.

    டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட் சாலை அதிகாலை முதல் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அந்த சாலை முழுவதிலும் வியாபாரிகள் கரும்பு, காய்கறிகள், மஞ்சள் குலைகள் உள்ளிட்டவற்றை அடுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மார்க்கெட்-கடைகள்

    நெல்லை டவுன் ரதவீதிகள், பாளை மகாராஜாநகர் உழவர் சந்தை, பாளை காந்தி மார்க்கெட், மேலப்பாளையம் உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் காய்கறி விற்பனை சூடுபிடித்தது. கிழங்கு வகைகள், காய்கறி வகைகள் உள்ளிட்டவற்றை சீர்வரிசை பொருட்களாக வழங்க வேண்டும் என்பதால் பெரும்பாலானோர் 2 கிலோ முதல் 5 கிலோ வரை மொத்தமாக வாங்கி சென்றனர்.

    இதேபோல மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பல சரக்குகடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    காய்கறிகள் தட்டுப்பாடு

    மார்க்கெட்டுகளில் இன்று ஒரு கிலோ வெள்ளை கத்தரிக்காய் ரூ.100 முதல் ரூ.130 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பச்சை நிற கத்தரிக்காய் கிலோ ரூ.60 வரை விற்கப்பட்டது. முருங்கைக்காய் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இன்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.140 முதல் ரூ.200 வரையிலும் விற்பனையானது. பெரும்பாலான இடங்களில் கத்தரிக்காய், முருங்கைக்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

    நெல்லையில் இன்று மண்பானைகள் அளவு வாரியாக ரூ.500 வரையிலும், பஞ்சவர்ண பானைகள் ரூ.800 வரையிலும், 3 அடுப்புக்கட்டிகள் ரூ.150 வரையிலும் விற்பனையாகிறது. 25 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.60 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    மஞ்சள் குலை ஒரு ஜோடி ரூ.25 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. 10 எண்ணிக்கை கொண்ட கரும்பு கட்டு ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கரும்பு ரூ.40 வரை விற்பனையாகிறது.

    காய்கறிகள்கிலோ(ரூ.)

    தக்காளி30

    கேரட் 55

    கத்தரிக்காய்130

    சேமங்கிழங்கு90

    வள்ளிகிழங்கு100

    சிறுகிழங்கு60

    நெல்லிக்காய்80

    பிடிகிழங்கு150

    உள்ளி100

    வெண்டைக்காய் 80

    அவரைக்காய்80

    சீனி அவரை60

    பீன்ஸ் 80

    நாட்டு மாங்காய் 90

    மிளகாய்80

    பூசணிக்காய் 25

    உருளைக்கிழங்கு 35

    சவ்சவ்25

    • தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
    • மண்பானையில் பஞ்சவர்ண நிறம் பூசி அழகூட்டியும் விற்பனை செய்து வருகின்றனர்.

    சேலம்:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப பல்வேறு வசதிகள் வந்தாலும், தமிழர் பாரம்பரிய முறையில் விறகு அடுப்பில் பனை ஓலைகளால் தீ மூட்டி மண்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைத்து வழிபடுவதையே அனைவரும் விரும்புகின்றனர்.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் விறகு அடுப்பு, அடுப்புக்கட்டி, மண்பானைகள், கரும்பு, பனை ஓலைகள், பனங்கிழங்கு போன்றவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மண்பானையில் பஞ்சவர்ண நிறம் பூசி அழகூட்டியும் விற்பனை செய்து வருகின்றனர்.

    சேலம் காந்தி ரோடு பகுதியில் இதற்காக நூற்றுக்கணக்கான பானைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. சிறியது முதல் பெரிய வகையான பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புது பானைகளில் வண்ண வண்ண வகையான கோலமிட்டு அவை விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் மகிழ்ச்சி பொங்க வாங்கிச் செல்கின்றனர்.

    சேலம் மாவட்டத்தில் வண்ணக் கோலத்திற்கு தேவையான வண்ணச் சாயப் பொடி விற்பனைக்கு வந்துள்ளது. கோலப் பிரியர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு கோலப்பொடியை வாங்கிச் செல்வது விற்பனை யாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பொங்கல் பானை விற்பனை குறித்து மண்பாண்ட தொழிலா ளர்கள் கூறுகையில், ''15 நாட்களுக்கு முன்பாகவே பலரும் பஞ்சவர்ண பானை கேட்டு ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். மண்பானைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த அனைவரும் மீண்டும் அதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர் என்றனர்.

    இதேபோல் கரும்பு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட மஞ்சள் குலைகள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளன. இதேபோல் வகை வகையான வண்ணங்களில் கோலப்பொடிகளும், வெல்லம் மற்றும் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது.

    சேலம், நாமக்கல் மாவட்டம் முழுவதுமே, பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டி உள்ளது.

    ×