search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு பஸ்-ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது
    X

    ஈரோடு பஸ்-ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது

    • ஈரோடு மாவட்டத்தில் மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
    • ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளதையொட்டி தொடர் விடுமுறை அறிவிக்கப்ப ட்டுள்ளது. தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் குடும்பத்துடன் நேற்று மதியம் முதல் செல்ல தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

    நேற்று மதியம் முதல் ஈரோடு பஸ் நிலையம் மற்றும் ெரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. தீபாவளி முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    முன்பதிவு அனைத்தும் நிரம்பி விட்டதால் சிறப்பு பஸ்களில் மக்கள் இடம் பிடிக்க போட்டா போட்டி போட்டனர்.

    குறிப்பாக நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை, நாகர்கோவில் போன்ற தொலைதூர ஊருக்கு செல்லும் பஸ்களில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவியது. இது தவிர சேலம், கோவை, திருப்பூர் பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க ஈரோடு பஸ் நிலையத்தில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள புறநகர் காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மக்கள் நடவடி க்கைகளை கண்காணித்து வருகின்றனர்.

    பஸ் நிலை யத்தில் தேவை யில்லாமல் சுற்றி திரிந்த நபர்களை எச்சரித்து அனுப்பி வைத்த னர். இதேபோல் சில குடிமகன்கள் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.

    அவர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இன்று காலை முதலே ஈரோடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குடும்ப குடும்பமாக மக்கள் சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்றனர்.

    இதனால் ஈரோடு பஸ் நிலையம் இன்று பரபரப்பாக காட்சியளி க்கப்பட்டது. மேலும் ஈரோடு போலீஸ் சார்பில் பஸ் நிலையத்தில் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு அங்கு 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு ெரயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் இன்று அதிக அளவில் இருந்தது. பொதுவாக ஈரோடு ெரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.

    தற்போது தொடர் விடு முறை வருவ தால் கடந்த 2 நாட்களாக ஈரோடு ெரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

    அனைத்து ெரயில்களி லும் முன்பதிவு நிரப்பி விட்டதால் முன்பதிவு இல்லாத பெட்டி களில் பயணிக்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    குறிப்பாக மதுரை, நெல்லை, நாகர்கோவில் செல்லும் ெரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிலர் நின்று கொண்டே பயணித்தனர்.

    ெரயில் நுழைவு பகுதியில் ஈரோடு ெரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி சமயம் என்பதால் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி யாராவது பட்டாசு கொண்டு செல்கின்றார்களா என்பதை கண்காணிக்கும் வகையில் ெரயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து அதன் பிறகு அவர்களே உள்ள அனுமதிக்கின்றனர்.

    தறி தொழிலாளர்கள், நெசவுத் தொழிலா ளர்களுக்கு தொடர் விடுமுறை வருவதால் அவர்கள் அனைவரும் குடும்பமாக இன்று ெரயில்களில் கிளம்பி சென்றனர்.

    இதனால் இன்று ஈரோடு ெரயில் நிலையம் பரபரப்பாக காட்சியளிக்கப்பட்டது.

    Next Story
    ×