உள்ளூர் செய்திகள்

ரேசன் அரிசி கடத்தல்; 5 பேர் கைது

Published On 2022-06-17 08:59 GMT   |   Update On 2022-06-17 08:59 GMT
  • ரேசன் அரிசி கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • மீனாம்பாள்புரம் ரேசன் கடையில் அரிசி கடத்திய தாக மேற்கண்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மதுரை

மதுரை செல்லூர் மீனா ம்பாள்புரம் ரேசன் கடையில் மர்ம கும்பல் லாரியில் அரிசி நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் மண்டல ரேசன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 6 பேர் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார்.

மற்ற 5 பேரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர்கள் செல்லூர் பிரபு (வயது 45), காமராஜர் சாலை அருண்ராஜ் (27), முருகன் 42), இன்னொரு முருகன் (30), ஜெயமுத்து மகன் பெரியசாமி (22) என்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து மீனாம்பாள்புரம் ரேசன் கடையில் அரிசி கடத்திய தாக மேற்கண்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் நிறுத்தப்ப ட்டு இருந்த சிறிய ரக சரக்கு ஆட்டோவில் சோதனை செய்து பார்த்தனர். அப்போது அதில் 1800 கிலோ எடை உடைய 36 மூடைகள் ரேஷன் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. அவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

செல்லூர் மீனாம்பாள் புரம் ரேசன் கடையில் பரவையை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். அவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். எனவே போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News