உள்ளூர் செய்திகள்

விளையாட்டு வீராங்கனைக்கு உதவி

Published On 2022-07-16 09:15 GMT   |   Update On 2022-07-16 09:15 GMT
  • சர்வதேச தடகளம் மற்றும் த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
  • தந்தை இல்லாத நிலையில், தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பரங்குன்றம்

நேபாளம் நாட்டில் நடைபெறும் சர்வதேச தடகளம் மற்றும் த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிக்கு மதுரையைச் சேர்ந்த துர்கா, சினேகா உட்பட 4 பேர் இந்திய அணி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் துர்கா என்ற மாணவி இந்திய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தந்தை இல்லாத நிலையில், தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் சர்வதேசே போட்டியில் பங்கேற்க பொருளாதாரம் இல்லாமல் தவித்த த்ரோபால் வீராங்கனை துர்காவிற்கு சமூக ஆர்வலரும் பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயில் தலைவருமான வ.சண்முகசுந்தரம் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கி வாழ்த்தினார்.

Tags:    

Similar News