உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

Published On 2022-07-09 09:53 GMT   |   Update On 2022-07-09 09:53 GMT
  • இளம்பெண் மாயமானார்.
  • சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை ஆண்டாள்புரம் கிழக்குத்தெருவை சேர்ந்த ராணி மகள் ஹரிதா (23). கடந்த 6-ந் தேதி இவர் தனது நண்பரின் தந்தையை பார்ப்பதற்காக மீனாட்சி மிஷின் மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்ைல. இதுகுறித்து தாய் ராணி கொடுத்த புகாரின்பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமங்கலம் பேரையூர் அருகே உள்ள சலுப்பப்பட்டியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் பாக்கியலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று பாக்கியலட்சுமி இளைய மகள் அருள்செல்வியுடன் (8) மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த போலீசார் சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News