உள்ளூர் செய்திகள்

அரூரில் காலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு

Published On 2023-02-24 09:38 GMT   |   Update On 2023-02-24 09:38 GMT
  • சளி, இருமல், காய்ச்சல் தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர்.
  • வாகனங்கள் முகப்பு விளக்கை போட்டவாறு இயக்கப்பட்டு வருகிறது.

அரூர்,

அரூர் பகுதியில் காலை நேரங்களில் கடும் பனி மூட்டமும், மதிய வேளையில் கடும் வெயிலும் வாட்டி வருகிறது.

மாறி மாறி வரும் சீதோஷ்ணத்தால் பலர் கடும் சளி, இருமல், காய்ச்சல் தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

காலை நேரங்களில் கடும் பனி மூட்டமாக காணப்படுகிறது. காலை 8 மணி வரையும் பனி மூட்டம் நிலவுவதால் வாகனங்கள் முகப்பு விளக்கை போட்டவாறு இயக்கப்பட்டு வருகிறது.

மதிய நேரத்தில் வெயிலின் தாக்கத்தை பார்க்கும் போது இந்த ஆண்டு கோடை காலம் கடும் சவாலாகவே இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News