உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் பேக்கரி உரிமையாளர் வீட்டில் தங்கம், வைர நகைகள் கொள்ளை

Published On 2022-08-11 09:34 GMT   |   Update On 2022-08-11 09:34 GMT
  • வீட்டை பூட்டி விட்டு மார்க்கெட் ரோட்டில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றார்
  • கொள்ளையர்கள் பீரோவில் இருந்த தங்க வைர நகை களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குமரன் நகரை சேர்ந்தவர் ரபிதீன் (வயது 46). இவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 7-ந் தேதி ரபிதீனின் அண்ணன் இறந்து விட்டார்.

இதனையடுத்து அவர் தனது வீட்டை பூட்டி விட்டு மார்க்கெட் ரோட்டில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றார். அப்போது இவரது வீட்டில் உள்ள பின் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

பின்னர் அறையில் இருந்த பிரோவை திறந்து அதில் இருந்த நெக்லஸ், வளையல், வைர மோதிரம், கம்மல், கைசெயின் உள்பட 19½ தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

மாலையில் வீட்டிற்கு திரும்பிய ரபிதீன் வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த தங்க வைர நகை களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் பொள்ளாச்சி மேற்கு போலீ சாருக்கு தகவல் தெரி வித்தார். உடன டியாக போலீ சார் சம்பவ இடத்துக்கு விரை ந்து சென்று விசார ணை நடத் தினர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளை யர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர்.

இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பேக்கரி உரிமையாளர் வீட்டில் தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளை யர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகளில் பொருத்த ப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளை யர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள்.  

Tags:    

Similar News