உள்ளூர் செய்திகள்

லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்ட காட்சி.

கவுன்சிலரின் முயற்சியால் 28-வது வார்டு பகுதியில் லாரி மூலம் குடிநீர் விநியோகம்

Published On 2022-07-14 09:26 GMT   |   Update On 2022-07-14 09:26 GMT
  • நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 28-வது வார்டு பகுதியில் சுமார் 7 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.
  • 28-வது வார்டில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

நெல்லை:

நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 28-வது வார்டு பகுதியில் சுமார் 7 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இதைத்தொடர்ந்து தங்களது வார்டுக்குட்பட்ட பகுதிக்கு உடனடியாக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என 28-வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகர், மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டு கொண்டார்.

அதன்பேரில் லாரி மூலம் இன்று 28-வது வார்டு பகுதியில் தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.

Tags:    

Similar News