உள்ளூர் செய்திகள்
கவுன்சிலரின் முயற்சியால் 28-வது வார்டு பகுதியில் லாரி மூலம் குடிநீர் விநியோகம்
- நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 28-வது வார்டு பகுதியில் சுமார் 7 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.
- 28-வது வார்டில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 28-வது வார்டு பகுதியில் சுமார் 7 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இதைத்தொடர்ந்து தங்களது வார்டுக்குட்பட்ட பகுதிக்கு உடனடியாக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என 28-வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகர், மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டு கொண்டார்.
அதன்பேரில் லாரி மூலம் இன்று 28-வது வார்டு பகுதியில் தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.