உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க.வினரை படத்தில் காணலாம்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு-மின்கட்டண உயர்வுக்கு எதிராக நெல்லையில் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-27 09:41 GMT   |   Update On 2022-07-27 09:41 GMT
  • மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் பிரசன்னா சிறப்புரையாற்றினார்.
  • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

நெல்லை:

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, மின்கட்டணம், பால் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகவேல், கிழக்கு மாவட்ட செயலாளர் விஜி வேலாயுதம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் பிரசன்னா சிறப்புரையாற்றினார்.

நிர்வாகிகள் மாடசாமி, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சின்னதுரை, முருகன், மாரியப்பன், மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News