உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.

ஓமலூர் அருகே கிராம இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி

Published On 2022-08-06 09:33 GMT   |   Update On 2022-08-06 09:33 GMT
  • கோட்டைமேட்டுப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற கிராமப்புற இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி நடைபெற்றது.
  • போட்டியில் கோட்டை மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விளையாடினர்.

ஓமலூர்:

ஓமலூர் ஒன்றியம் கோட்டைமேட்டுப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற கிராமப்புற இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி நடைபெற்றது. போட்டியில் கோட்டை மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விளையாடினர்.

போட்டியை ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கணேசன் தொடங்கி வைத்தார். போட்டியில் ஆட்டோமேட்டிக் பகுதியில் சேர்ந்த இளைஞர் அன்பரசு முதல் பரிசை தட்டிச் சென்றார் அதே பகுதியைச் சேர்ந்த பிரேம் குமார் 2-ம் பரிசும் நந்தகோபால் 3-ம் பரிசும் பெற்றனர். இவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

இதில் துணைத் தலைவர் மகாலட்சுமி வார்டு உறுப்பினர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் பூவராகவன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News