உள்ளூர் செய்திகள்

விபத்தில் ஆட்டோ கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

அம்பையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து- பெண்கள் உள்பட 6 பேர் காயம்

Published On 2022-08-04 09:34 GMT   |   Update On 2022-08-04 09:34 GMT
  • அம்பை அருகே உள்ள சிவந்திபுரத்தில் நடைபெற்ற கோவில் கொடை விழாவிற்காக நேற்று சென்றனர்.
  • அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை:

நெல்லை டவுன் சவுகத்அலி தெருவைச் சேர்ந்த கல்யாணி (வயது 70), இசக்கியம்மாள் (55), மற்றொரு இசக்கியம்மாள் (23), சந்தோஷ் (17) உள்பட 7 பேர் அம்பை அருகே உள்ள சிவந்திபுரத்தில் நடைபெற்ற கோவில் கொடை விழாவிற்காக நேற்று சென்றனர்.

விழா முடிந்து இன்று காலை அவர்கள் நெல்லை நோக்கி ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஆட்டோவை நெல்லையை சேர்ந்த சத்தியநாராயணன் (32) என்பவர் ஓட்டிச் சென்றார்.

அம்பை வனத்துறை துணை இயக்குனர் அலுவலகம் அருகே ஆட்டோ சென்றபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்திற்குள் கவிழ்ந்தது. இதில் பயணித்த கல்யாணி, இசக்கியம்மாள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

இது குறித்த தகவலறிந்து சென்ற அம்பை தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த விபத்து தொடர்பாக அம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News