search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auto"

    • ஆட்டோ மீது பூச்செடிகள் வளர்ந்துள்ளதால் ஆட்டோவில் உள்பகுதியில் குளுமையாக உள்ளது.
    • அஞ்சுக்கு அதிக அளவில் சவாரி கிடைப்பதால் கணிசமான அளவில் வருமானம் ஈட்டி வருகிறார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மெகபூபாபாத்தை சேர்ந்தவர் அஞ்சி. இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    வாகன பெருக்கத்தின் காரணமாக சுற்றுச்சூழல் மாசு அடைந்து வருவதால் வித்தியாசமாக ஏதாவது செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என விரும்பினார்.

    அதன்படி அஞ்சு தனது ஆட்டோவின் மேற்கூரையில் வித்தியாசமான முறையில் பல்வேறு பூச்செடிகளை நட்டு நகரும் தோட்டம் அமைத்து உள்ளார். அஞ்சுவின் ஆட்டோ மேற்கூரையில் பூச்செடிகள் பூத்து குலுங்குவது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

    வித்தியாசமான முறையில் ஆட்டோ மீது பூந்தோட்டம் அமைத்துள்ளதை அப்பகுதி மக்கள் அதிசயமாக பார்க்கின்றனர். மேலும் அவரது ஆட்டோவில் உள்பகுதியில் மின்விசிறியும் பொருத்தியுள்ளார்.

    இவரது ஆட்டோ மீது பூச்செடிகள் வளர்ந்துள்ளதால் ஆட்டோவில் உள்பகுதியில் குளுமையாக உள்ளது.

    அஞ்சுவின் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு வெப்பம் தெரியாமல் சில்லென்ற காற்று வீசுவதால் பயணிகள் இவரது ஆட்டோவில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

    அஞ்சுக்கு அதிக அளவில் சவாரி கிடைப்பதால் கணிசமான அளவில் வருமானம் ஈட்டி வருகிறார். தற்போது கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் அஞ்சுவுவின் ஆட்டோவில் பயணிக்க பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள் என கூறப்படுகிறது.

    அஞ்சுவை அப்பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள் உள்ளிட்டோர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். இவரது ஆட்டோவின் படங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு ஏராளமானோர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

    • தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
    • போக்கு வரத்து துறையின் திடீர் கட்டண நடை முறைக்கு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் அரசு பஸ்களை விட தனியார் பஸ்களே பொது போக்குவரத்துக்கு அதிகம் புழக்கத்தில் உள்ளது.

    வெளிமாநிலத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் ஆட்டோக்களில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    இதனால் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆட்டோக்களை பயன்படுத்துவதையே தவிர்த்து வருகின்றனர். கட்டணத்தை முறைப்படுத்த மீட்டர் பொருத்தினால் மட்டுமே எப்.சி. சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

    புதுவையில் ஒடும் பெரும்பாலான ஆட்டோக்களிலும் மீட்டர் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் மீட்டரை இயக்குவதில்லை. ஆட்டோக்களுக்கு கட்டணமும் 2016-ல் நிர்ணயித்திருந்தனர். கடந்த 8 ஆண்டாக இந்த கட்டணம் நடைமுறைக்கு வரவில்லை.

    இந்த நிலையில் போக்குவரத்து துறைக்கு ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து போக்குவரத்து துறை, மீட்டர் கட்டணத்தை வசூலிக்காத, மீட்டர் பொருத்தாத ஆட்டோக்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

    இந்த எச்சரிக்கை இன்றும் பெரும் பாலான ஆட்டோ க்களில் பின்பற்றப் பட வில்லை. வாடிக்கை யாளர்களிடம் பேசிய கட்டணம் வசூலித்தனர். போக்கு வரத்து துறையின் திடீர் கட்டண நடை முறைக்கு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க செயலாளர் சீனுவாசன் கூறியதாவது:-

    ஆட்டோ கட்டணம் நிர்ணயித்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் பல முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு ஆட்டோக்கள் வரி, உதிரிபாகங்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் கட்டணத்தை உயர்த்தும் போது ஆட்டோ தொழிற்சங்க ங்களை அழைத்து பேசி கட்டணம் நிர்ணயம் செய்கி ன்றனர். ஆனால் புதுவையில் திடீரென 8 ஆண்டுக்கு முன்பு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கி ன்றனர்.

    அதற்கு பதிலாக ஆட்டோ தொழிற்சங்கங்களை அழைத்து பேசி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஏ.ஐ.டி.யூ.சி. மாநில ஆட்டோ தொழிலாளர் நலச்சங்கம் பொதுசெயலாளர் சேது செல்வம் கூறியதாவது:-

    7 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலைவாசி இப்பொழுது உள்ளதா? குறிப்பாக பெட்ரோல், இன்சூரன்ஸ், எப்.சி. கட்டணம், சாலை வரி, ஆட்டோ உதிரி பாகங்கள், பல மடங்கு உயர்ந்துள்ளது.

    அது மட்டுமின்றி அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    அண்டை மாநிலங்களில் அரசு ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்யும்போது ஆட்டோ தொழிற்சங்க த்தோடு கலந்து பேசி மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஜெகன்மோகன் ரெட்டி அரசு ஆண்டுதோறும் ஆட்டோ எப்.சி. எடுப்பதற்கு ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்குகிறது.

    பல்வேறு மாநிலங்களில் அங்குள்ள அரசுகள் கியாஸ் பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த உண்மைகளை உணர்ந்து போக்குவரத்து துறை செயல்படுமானால்

    ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம் வசூலிப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஷேர் ஆட்டோக்களின் விதிமீறல்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மதுரை நகர சாலைகள் உள்ளன.
    • குறைந்தது 8 பயணிகள் வரை ஏற்றிச் செல்கின்றனர்.

    மதுரை

    தமிழகத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப வாகன பயன்பாடும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பொது போக்குவரத்தான அரசு பஸ்களை அதிக அளவில் மக்கள் நம்பியுள்ளனர். அரசு பஸ்கள் செல்லாத வழித்தடங்களில் மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் ஓர் இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு செல்ல பயணங்கள் எளிதாகின்றன.

    ஆனால் மதுரை நகரில் ஷேர் ஆட்டோக் களால் நன்மைகளை விட சிரமங்களையே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிகமாக சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நகரில் குறைந்த அளவு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டது. ஆனால் தற்போது புற்றீசல்கள் போல் ஷேர் ஆட்டோக்கள் அதிகரித்து வருகின்றன.

    நினைத்த இடத்தில் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி ஆட்களை ஏற்றுவதும் இறக்குவதும், பஸ் நிறுத்தங்களில் மணிக்கணக்கில் நின்று பயணிகளை ஏற்றி செல்வது, சாலையில் அதிவேகமாக ஓட்டி செல்வது உள்ளிட்ட பல்வேறு விதிகளை ஷேர் ஆட்டோக்கள் ஓட்டுனர்கள் மீறி வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. ஏற்கனவே மதுரை நகர சாலைகள் குண்டும் குழியுமாக உள்ள நிலையில் ஷேர் ஆட்டோக்களின் விதிமீறல்களால் வாகன ஓட்டிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.

    தெற்கு வாசல், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, பெரியார் பஸ் நிலையம், அவனியாபுரம், காளவாசல், திருப்பரங்குன்றம், கீழவாசல், காமராஜர் சாலை, உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்புக்கும் நெரிசலுக்கும் முக்கிய காரணமாக இருப்பது ஷேர் ஆட்டோக்கள் என்பது நிதர்சனமான உண்மை. ஷேர் ஆட்டோக்கள் ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    மேலும் பயணிகளை ஏற்றுவதில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களிடையே நடுரோட்டிலேயே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. சில நேரங்களில் அடிதடிகளில் முடிகிறது.

    பண்டிகை நேரத்தில் ஆட்களை ஏற்றி செல்வதில் அருகருகே ஆட்ேடாக்களை நிறுத்தி வைத்து கொண்டு வாக்கு வாதத்தில் ஈடுபடு கின்றனர்.

    மோட்டார் வாகன சட்டத்தின் படி 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் லைசன்ஸ் பெற்றவர்கள் மட்டுமே மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாக னங்களை இயக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் மதுரையில் ஓட்டும் சில ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மேற்கண்ட ஆவணங்கள் முறையாக உள்ளதா? என தெரியவில்லை. போக்குவரத்து விதிகள் குறித்தும் போதிய விழிப்புணர்வும் இல்லை. 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் ஷேர் ஆட்டோக்களை இயக்குவதை காண முடிகிறது. மதுரையில் இயக்கப்படும் ஒரு ஷேர் ஆட்டோவில் குறைந்தது 8 பயணிகள் வரை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    ஷேர் ஆட்டோக்கள் விதிமீறல்களுக்கு தொடர்ச்சியாக அபராதங்கள் விதிக்கப்படு கிறது. ஆனால் அபராதம் கட்டிவிட்டு மீண்டும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் மனம் போன போக்கில் செயல்படுகின்றனர். பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக ஷேர் ஆட்டோக்கள் உள்ளன.

    கடந்த காலங்களில் 3 மாதத்திற்கு ஒருமுறை நகர் முழுவதும் ஷேர் ஆட்டோக்களை போலீசார் தணிக்கை செய்து வந்தனர். ஆனால் தற்போது இந்த நடைமுறையை காண முடியவில்லை. இது ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது.

    இந்த நிலையில் மதுரை நகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஷேர் ஆட்டோக்கள் விதிமீறல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .

    • பசுவை வாரிய பணியாளர் சந்துரு மற்றும் நகராட்சி பணியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
    • மேலும் சாதிக் பாஷாவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி நகராட்சிக் குட்பட்ட பகுதியில் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய நகராட்சி ஆணையர் மகேஸ்வரி அலுவலர்களுக்கு உத்தர விட்டார். அதன்படி நகராட்சி துப்புரவு அலு வலர் ரவீந்திரன் தலைமை யில் துப்புரவு ஆய்வாளர் சையது காதர், களப்பணி யாளர் மகேஸ்வரி, பசுவை வாரிய மேலாளர் சேகர், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் சத்யராஜ், பாலகிருஷ்ணன், அன்புதுரை, தூய்மை இந்தியா திட்டம் மேற்பார் வையாளர் பரிமளா, பசுவை வாரிய பணியாளர் சந்துரு மற்றும் நகராட்சி பணியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கள்ளக்குறிச்சி க.மாமனந்தல் ரோடு பகுதி யைச் சேர்ந்த சாதிக் பாஷா என்பவர் ஆட்டோவில் ஒருமுறை பயன்படுத் தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து ஆட்டோவில் இருந்த 750 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் சாதிக் பாஷாவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி ஆணையர் மகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து ஆணையர் மகேஸ்வரி கூறுகையில், கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்து வதோ அல்லது மொத்த மாக விற்பனை செய்வதோ தெரிய வந்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக் கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

    • வசூல் செய்வதற்காக ஆட்டோவில் மங்கநல்லூர் வரை சென்றுள்ளார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் காசி ராமன் தெருவை சேர்ந்தவர் தொப்பையன் (வயது 57). இவர் கும்பகோணம் காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    சம்பவதன்று இவர் வசூல் செய்வதற்காக ஆட்டோவில் மங்கநல்லூர் வரை சென்றுள்ளார்.

    பின்னர் பூம்புகார்- கல்லணை சாலை வழியாக ஊர் திரும்பி கொண்டிருந்தார். கல்யாணபுரம் மெயின் ரோட்டில் வந்தபோது ஆட்டோவை சாலை ஓரமாக நிறுத்த சொல்லி கீழே இறங்கி இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது சாலையை கடந்த போது அவ்வழியாக வந்த பயணிகள் ஆட்டோ அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தொப்பையனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவிடைமருதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதி த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நாங்குநேரி அருகே உள்ள அம்பலம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • இதில் ஆட்டோவில் 9 சாக்குகளில் 360 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

    களக்காடு:

    நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நாங்குநேரி அருகே உள்ள அம்பலம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் ஆட்டோவில் 9 சாக்குகளில் 360 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தி வந்த பொன்னாகுடி சமத்துவபுரத்தை சேர்ந்த சசிகுமார் (27), அவரது தம்பி ரஞ்சித்குமார் (26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட ஆட்டோவையும், ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

    • தமுக்கம் மைதானத்தில் ஆட்டோ எக்ஸ்போ-2023 கண்காட்சி நாளை வரை நடக்கிறது
    • ஓர்க்ஷாப் டூல்ஸ் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன.

    மதுரை

    தமிழ்நாடு ஆட்டோ மொபைல் மற்றும் அலைடு இன்டஸ்ட்ரீஸ் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு மோட்டார் பார்ட்ஸ்டீலர்ஸ் அசோசியே சன் சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில அளவி லான ஆட்டோமொபைல்ஸ் கண்காட்சியை நடத்துகிறது.

    இந்த ஆண்டுக்கான கண் காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. கண்காட் சியை சுந்தரம் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சரத் விஜயராகவன் திறந்து வைத் தார்.

    இதில், மதுரை மோட் டார்ஸ் பார்ட்ஸ் வியாபாரி கள் சங்கத்தலைவர் சிதம்ப ரம், டி.ஏ.ஏ.ஐ.எப், தலைவர் ராஜேஸ்வரன், கண்காட்சி தலைவர் முருகேசன், செய லாளர் சிதம்பரம், துணை தலைவர் சதீஷ்குமார், பொருளாளர் சிதம்பர நாதன், டி.வி.எஸ். ஆட்டோ மொபைல்ஸ் சொலியூ ஷன்ஸ்மேலாண்மை இயக்கு னர் சீனிவாசராகவன், ரானோ ஆப்டர் மார்க்கெட் பிசினஸ் தலைவர் கிரி பிரசாத், ரூட் இன்டஸ்ட்ரீஸ் இந்தியா நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சரவணசுந்தரம், எம்.என். ஆட்டோ புராடெக்ட்சுந்தா ராஜன், கண்காட்சி ஒருங்கி ணைப்புகுழு உறுப்பினர் ரவி, லயன் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கண்காட்சியானது இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் முன்னணி இருசக்கர வாகன கார் மற்றும் நிறுவனங்கள், உதிரி பாகங் கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 140 அரங்குகள் அமைத்துள்ளன.

    குறிப்பாக வாகனங்களின் உதிரி பாகங்கள், உயர், டியூப், பேட்டரி. பேரிங் கேபிள்கள், ஓர்க்ஷாப் டூல்ஸ் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த கண்காட்சி மெக்கா னிக்குகள் மட்டுமின்றி வாக னங்கள் ஓட்டுனர்கள். வாகன உரிமையாளர்க ளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பார்வையா ளர்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை குலுக்கல் முறையில் பரிசு கள் வழங்கப்படுகின்றன. கண் காட்சியை இலவசமாக காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையிட லாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    • லாரி ஆட்டோவின் கண்ணாடிகள் மர்ம நபர்கள் கல்லால் அடித்து உடைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • இருவரும் ரவுடிப்பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராயபுரம்:

    பூந்தமல்லி கூடம்பாக்கம் சேர்ந்தவர் இளங்கோ (வயது 44) லாரி டிரைவர். தண்டையார்பேட்டை இளைய முதலில் தெருவை சேர்ந்தவர் மதன்குமார் (37) சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர்கள் இருவரும் வேலை முடிந்து காசிமேடு சிங்காரவேலன் நகரில் லாரி மற்றும் ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்றனர்.

    பின்னர் லாரி ஆட்டோவின் கண்ணாடிகள் மர்ம நபர்கள் கல்லால் அடித்து உடைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி இளங்கோ, மதன்குமார் ஆகியோர் காசிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    அதில் காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த பிரதீப் (20), அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் சூர்யா (26) ஆகியோர் குடி போதையில் லாரி, ஆட்டோ கண்ணாடியில் கல்லை வைத்து உடைத்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பிரதீப் மீது 1 கொலை, 3 கொலை முயற்சி உள்பட 13 வழக்குகளும், சூர்யா மீது 1 கொலை முயற்சி உட்பட 2 வழக்குகளும் உள்ளன. இருவரும் ரவுடிப்பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கழிவு நீர் ஓடையில் இருந்து வெளியே வந்த பாம்பு பைக்கிற்குள் புகுந்துள்ளது.
    • வாகனத்தில் இருந்து வெளியேறிய பாம்பு அருகில் இருந்த ஆட்டோவின் உள்ளே புகுந்தது.

    பைக்கில் புகுந்த பாம்பையும், பொதுமக்கள் பைக்கின் உள்ளே வெந்நீர் ஊற்றி அதனை வெளியேற்றுவதையும் படத்தில் காணலாம்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு பகுதியில் பழைய பஸ் நிலையம் அமைந்துள்ளது. மாநகர பகுதிகளுக்குள் செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் இப்பகுதியில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    பஸ் நிலைய

    கட்டுமான பணி

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பஸ் நிலையம் இடித்து அகற்றப்பட்ட பின்னர் புதிதாக பஸ் நிலையம் கட்டும் பணி நடந்துவரும் சூழலில் பஸ் நிலையத்தை சுற்றி பஸ் நிறுத்தங்கள் அமைக்கப் பட்டு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் இந்த பஸ் நிலையம் வழியாக நெல்லையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    இப்பகுதிக்கு வரக்கூடிய பொதுமக்கள் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு தங்களது பணிகளை மேற்கொள்வார்கள்.

    'பைக்'கிள் வாகனத்தில்

    புகுந்த பாம்பு

    இந்நிலையில் இன்று காலை வழக்கமான பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு நபர் பழைய பஸ் நிலையம் அருகே இருக்கக் கூடிய தனியார் வங்கி முன்பு பைக்கை நிறுத்தி விட்டு சென்றபோது அப்பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடையில் இருந்து வெளியே வந்த பாம்பு ஒன்று பைக்கிற்குள் புகுந்துள்ளது.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் வாகனத்தின் உரிமையாளரிடம் தகவல் தெரிவிக்க அவர் வாகனத்தில் இருந்து பாம்பை அப்புறப்படுத்துவதற்கான பல்வேறு கட்ட முயற்சி களை மேற்கொண்டும் பலனளிக்கவில்லை.

    வெந்நீர் ஊற்றினர்

    பின்னர் அருகில் இருந்த டீக்கடையில் இருந்து வெந்நீர் வாங்கி வந்து 'பைக்'கிள் ஊற்றிய நிலையில் பாம்பு வாகனத்தில் இருந்து வேகமாக வெளியேறி அருகில் இருந்த மற்றொரு ஆட்டோவின் உள்ளே புகுந்தது.

    தொடர்ந்து அங்கிருந்தும் பாம்பை அப்புறப்படுத்தும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டு பாம்பை பிடிக்க முயன்றபோது அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் பாம்பு சென்று மறைந்து கொண்டது. 

    • கோவில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ காணாமல் போனது.
    • கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை சேர்ந்தங்குடி ஆனதாண்டவபுரம் சாலை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சரவணன் (வயது 39).

    ஆட்டோ டிரைவரான இவர் அந்த பகுதியில் உள்ள வள்ளலார் கோவிலில் இரவு காவலராகவும் இருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று ஆட்டோ சவாரிகளை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு வள்ளலார் கோவில் வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் சென்றுள்ளார்.

    அதிகாலை 5 மணிக்கு வெளியே வந்து பார்த்தபோது ஆட்டோ காணாமல் போயிருந்தது. இது குறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் அளித்திருந்தார்.

    புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் ஆட்டோவை திருடி சென்றவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த பாலாஜி மகன் கட்டக்கால் கலியமூர்த்தி என்கிற கலியமூர்த்தி (36) என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து கலியமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த திருடி சென்ற ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட கலியமூர்த்தி மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த கலியமூர்த்தி மீது தாம்பரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் ஏற்கனவே மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்கள் திருடியதாக வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆட்டோ சவாரிகளை முடித்துவிட்டு இரவு கோவில் வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் சென்றுள்ளார்,
    • மீண்டும் காலையில் வந்து பார்த்த போது ஆட்டோவை காணவில்லை.

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறை சேர்ந்தங்குடி ஆனதாண்டவபுரம் சாலை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சரவணன் (வயது 39). ஆட்டோ டிரைவரான இவர் அந்த பகுதியில் உள்ள வள்ளலார் கோவிலில் இரவு காவலராகவும் இருந்து வருகிறார். சம்பவத்தன்று ஆட்டோ சவாரிகளை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு வள்ளலார் கோவில் வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் சென்றுள்ளார்.

    அதிகாலை 5 மணிக்கு வெளியே வந்து பார்த்தபோது ஆட்டோ காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துள்ளார். ஆனால் ஆட்டோ கிடைக்கவில்லை. இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளில் பதிவான ஆட்டோவை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சாலையின் நடுவே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
    • மோட்டார்சைக்கிளில் வருபவர்களும் அதே பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

    தென்காசி:

    நெல்லை-தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்துள்ள சாலைப்புதூரில் ஒருபுறம் சாலை போடும் பணி முழுமையாக முடிவுற்ற நிலையில், மற்றொரு பகுதியில் ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளன.

    குழாயில் உடைப்பு

    இதில் சாலை பணி முடிவடைந்த பகுதியில் திடீரென சாலையின் நடுவே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

    மேலும் அதே பகுதியில் பெரிய பள்ளமும் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் அதன் வழியே அணிவகுத்து செல்லும்போது பள்ளத்தில் சிக்கி விபத்துக்கள் ஏற்படுகின்றன. நேற்று மாலையில் பாவூர்சத்திரம் வழியாக நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ஆட்டோ ஒன்று சாலைப்புதூரில் சாலையின் நடுவே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்திலிருந்த பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது.

    இதில் ஆட்டோவில் பயணம் செய்தவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இருப்பினும் ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது.

    கோரிக்கை

    அதேபோன்று மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் வருபவர்களும் அதே பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர் என்றும், நான்கு வழிச்சாலை பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் உடனடியாக சாலைப்புதூரில் சாலையின் நடுவே குடிநீர் குழாய் உடைந்து செல்லும் பகுதியை சீர் செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×