உள்ளூர் செய்திகள்
வேலை இல்லாத விரக்தியில் ஒருவர் தற்கொலை
- வேலை இல்லாத விரக்தியில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
- குடிப்பழக்கத்திற்கு இவர் அடிமையானார்
திருச்சி:
திருச்சி உறையூர் பாளையம் பஜார் கொச மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 41). தொடர்ந்து வேலை இல்லாததால், விரக்தியில் குடிப்பழக்கத்திற்கு இவர் அடிமையானார். இந்நிலையில் மணிவண்ணன் வீட்டு மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி நிர்மலா கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.