உள்ளூர் செய்திகள்
சேரன்மகாதேவியில் ரெயில்வே கேட் அருகே பிணமாக கிடந்த முதியவர்
- பிச்சையா கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
- ரெயில்வே கேட் அருகே பிச்சையா இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நெல்லை:
சேரன்மகாதேவி சுண்ணாம்பு கால் தெருவை சேர்ந்தவர் பிச்சையா (வயது 67). இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற பிச்சையா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
உடனே அவரது மனைவி சண்முக வடிவு சேரன்மகாதேவி போலீசில் புகார் அளித்தார்.
இதற்கிடையே அப்பகுதியில் உள்ள ரெயில்வே கேட் அருகே பிச்சையா இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அங்கே விரைந்து சென்று பிச்சையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.