உள்ளூர் செய்திகள்
பிரிவுபசார விழா

மாணவர்களுக்கு பிரிவுபசார விழா

Published On 2022-05-14 10:36 GMT   |   Update On 2022-05-14 10:36 GMT
தொண்டி அருகே மாணவர்களுக்கு பிரிவுபசார விழா நடந்தது
தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி அருகே உள்ள தாமோதரன்பட்டினம் கடலோர கிராமத்தில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு   பொது தேர்வு முடிவடைகிறது. 

தொடக்கப்பள்ளியை முடித்து பள்ளியை விட்டு பிரியும் மாணவ, மாணவிகள்  தலைமை ஆசிரியர் முத்துசாமி தலைமையில் பிரிவு உபசார விழா நடந்தது.5-ம் வகுப்பு மாணவர்கள் சிறுதொகை சேர்த்து பள்ளிக்கு நாற்காலியை நினைவு பரிசாக வழங்கினர். 

மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.  மாணவர்களுக்கு இனிப்பு, காரம், குளிர்பானம் வழங்கப்பட்டது. தன்னுடன் பயின்ற  மாணவ, மாணவிகள் தங்கள் தோழன் தோழிகளுக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.  உதவி ஆசிரியை சிவசங்கரி நன்றி கூறினார்.
Tags:    

Similar News