உள்ளூர் செய்திகள்
தொண்டி அருகே மாணவர்களுக்கு பிரிவுபசார விழா நடந்தது
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள தாமோதரன்பட்டினம் கடலோர கிராமத்தில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு பொது தேர்வு முடிவடைகிறது.
தொடக்கப்பள்ளியை முடித்து பள்ளியை விட்டு பிரியும் மாணவ, மாணவிகள் தலைமை ஆசிரியர் முத்துசாமி தலைமையில் பிரிவு உபசார விழா நடந்தது.5-ம் வகுப்பு மாணவர்கள் சிறுதொகை சேர்த்து பள்ளிக்கு நாற்காலியை நினைவு பரிசாக வழங்கினர்.
மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்களுக்கு இனிப்பு, காரம், குளிர்பானம் வழங்கப்பட்டது. தன்னுடன் பயின்ற மாணவ, மாணவிகள் தங்கள் தோழன் தோழிகளுக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தனர். உதவி ஆசிரியை சிவசங்கரி நன்றி கூறினார்.