உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

லாட்டரி சீட்டு, கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2022-05-13 08:58 GMT   |   Update On 2022-05-13 08:58 GMT
திருச்சியில் லாட்டரி சீட்டு, கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி:

திருச்சி இ.பி.ரோடு அந்தோணியார் கோவில் அருகே லாட்டரி விற்கப்படுவதாக வந்த தகவலை  தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது லாட்டரி விற்றதாக காந்தி மார்க்கெட் காமராஜ் நகரைச் சேர்ந்த சிவச்சந்திரன் (வயது 36) என்பவரை கைது செய்தனர். 

அவரிடமிருந்து பணம் மற்றும் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றதற்கான ஆவணங்களை கோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.
 

இதேபோல் திருச்சி பாலக்கரை முறுக்குகார தெரு பொதுக்கழிப்பிடம் அருகே கஞ்சா விற்றதாக அருண் குமார் (வயது 29) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. 

திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து பணம், கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News