உள்ளூர் செய்திகள்
.

எடப்பாடி அருகே முனியப்பன் கோவில் உண்டியலில் திருட்டு

Published On 2022-05-09 06:26 GMT   |   Update On 2022-05-09 06:26 GMT
எடப்பாடி அருகே முனியப்பன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போனது.
எடப்பாடி:

எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி ஊராட்சி கொல்லப்பட்டியில் முனியப்பன் மற்றும் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியல் 3 மாதங்களுக்கு ஒரு முறை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். 

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் சிலர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News