உள்ளூர் செய்திகள்
திறப்பு விழாவில் பங்கேற்றவர்கள்.

பல்லடத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை அலுவலக திறப்பு விழா

Published On 2022-04-28 07:59 GMT   |   Update On 2022-04-28 07:59 GMT
அலுவலகத்தை திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், மாநகராட்சியின் 4 -வதுமண்டல குழு தலைவருமான இல.பத்மநாபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பல்லடம்:

பல்லடம் அரசு போக்குவரத்து கழக டிப்போ அருகே தி.மு.க.தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அலுவலகத்தை திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், மாநகராட்சியின் 4 -வது மண்டல குழு தலைவருமான இல.பத்மநாபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

இதில் பல்லடம் நகர திமுக பொறுப்பாளர் ராஜேந்திரகுமார், தொ.மு.ச. மாவட்ட, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் அதிலிருந்து விலகி இல.பத்மநாபனுக்கு சால்வை அணிவித்து தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் இணைந்துகொண்டார்.
Tags:    

Similar News