search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் செய்திகள்"

    வேலை செய்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் அங்கிருந்த சுமார் 30 தொழிலாளர்கள் உயிர் தப்பினர் .
    பல்லடம்:

    பல்லடம் அருகே கல்லம்பாளையத்தை சேர்ந்தவர்  மனோஜ்.இவர் அந்தப் பகுதியில் பஞ்சு மில் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று மதியம் பஞ்சுமில்லில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

    இதையடுத்து உள்ளே வேலை செய்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். தீ விபத்து குறித்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்குள் பஞ்சு இருப்பு அறை, மற்றும் பஞ்சு கலவை அறை ஆகியவற்றில் தீ மளமளவென பற்றி அங்கிருந்த எந்திரங்கள் மற்றும் பஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பலாகின. 

    இதன் மதிப்பு சுமார் பல லட்சம் ரூபாய் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் அங்கிருந்த சுமார் 30 தொழிலாளர்கள் உயிர் தப்பினர் .தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    மங்களூரு- சென்னை செல்லும் ரெயிலில் (எண்.12602) இன்று முதல் கூடுதலாக 1 படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்.ரெயில்கள் போத்தனூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    மங்களூரு - சென்னை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (எண்.22638) கூடுதலாக 1 படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இது போல் சென்னை - மங்களூரு செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ் பிரஸ் ரெயிலில் (எண்.22637) நாளை 4-ந் தேதி முதல் 1 படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும். சென்னை - மங்களூரு செல்லும் ரெயிலில் (எண்.12601) நேற்று (வியா ழக்கிழமை) முதல் கூடுதலாக 1 படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

    அதுபோல் மங்களூரு - சென்னை செல்லும் ரெயிலில் (எண்.12602) இன்று முதல் கூடுதலாக 1 படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும். திருவனந்தபுரம் - சாலிமர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (எண்.22641) இன்று முதலும், சாலிமர் - திருவனந்தபுரம் வாராந்திர எக்ஸ்பி ரஸ் ரெயிலில் (எண்.22642) வருகிற 5-ந் தேதி முதலும் 1 படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி-ஸ்ரீமாதா வைஷ்ணவ் தேவி கட்ரா வாராந்திர ரெயிலில் (எண். 16317) இன்று முதலும், ஸ்ரீமாதா வைஷ்ணவ் தேவி கட்ரா-கன்னியாகுமரி வராந் திர ரெயிலில் (எண். 16318) வருகிற 6-ந் தேதி முதலும் 1 படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது. மேற்கண்ட 8 ரெயில்களிலும் நிரந்தரமாக 1 படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது. இந்த ரெயில்கள் போத்தனூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை மற் றும் அரசிடம் இருந்து பெற்ற செட்டாப் பாக்ஸ்களை ஒப்படைக்க வேண்டும்.தவறும்பட்சத்தில் உள்ளூர் ஆபரேட்டர்கள் மீது குற்ற வியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தினரால் பொது மக்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ் குறைந்த தொகையில் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட் டர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 

    சந்தாதாரர்களின் விருப்பம் இல்லாமல் அரசு செட்டாப் பாக்சை மாற்றி னாலோ அல்லது அரசு சிக்னல் இனி வராது என்று தவறான தகவலை ஆபரேட்டர்கள் கூறி மாற்றினால் உடனடியாக 0421 2971142 என்ற திருப்பூர் அரசு கேபிள் டி.வி. அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கலாம்.

    செட்டாப் பாக்ஸ் பழுதடைந்தாலோ, மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டித்திருந்தாலோ, வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தாலோ, தனிநபர் செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தினாலோ செட்டாப் பாக்ஸ், ஏ.வி. கார்டு, ரிமோட், பவர் அடாப்டர் ஆகியவற்றை உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும். 

    அவற்றை அரசு கேபிள் டி.வி. அலுவலகத்தில் ஒப்ப டைக்க வேண்டும். உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வேறு நிறுவ னத்துக்கு செல்லும்போது, அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை மற்றும் அரசிடம் இருந்து பெற்ற செட்டாப் பாக்ஸ்களை ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்யாத ஆபரேட்டர்கள் மீது சட்டப்பூர்வமான நடவ டிக்கை எடுக்கப்படும்.

     செயல்படாத செட்டாப் பாக்ஸ் கள், அனலாக் தொகை செலுத்தாமல் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் இருக்கிறார்கள். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை இறுதி வாய்ப் பாக கொண்டு வருகிற 20-ந் தேதிக்குள் செயல்படாத செட்டாப் பாக்ஸ்களை ஒப்படைக்க வேண்டும். அனலாக் தொகையை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் உள்ளூர் ஆபரேட்டர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    கடந்த சில நாட்களாக, மழை இடைவெளி விட்டு, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வறட்சியாக வேகத்துடன் காற்று வீசுவதால் விளைநிலங்களில் ஈரப்பதம் வேகமாக காய்ந்து விடும்.
    உடுமலை:

    உடுமலை பகுதியில் ஆண்டுதோறும், ஏப்ரல் முதல் வாரத்தில் காற்றின் வேகம் அதிகரித்து, செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். இந்த சீசனின் போது வீசும் காற்றால், காற்றாலைகளில் மின் உற்பத்தி கூடுதலாகும்.

    இந்த முக்கிய காற்று சீசனை அடிப்படையாகக்கொண்டே, உடுமலை சுற்றுப்பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன.இந்நிலையில், இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக, காற்று சீசன்  ஏப்ரல் மாதத்தில் துவங்காமல் தாமதமானது.கோடை கால மழையும் குறிப்பிட்ட இடைவெளியில்பெய்து ஈரக்காற்றும் அதிக நாட்கள் வீசியது. இம்மாத துவக்கத்திலும் காற்றின் வேகம் குறைவாகவே இருந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக, மழை இடைவெளி விட்டு, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதே போல் காற்றின் வேகமும் கூடுதலாகியுள்ளது.உடுமலை பகுதியில் சராசரியாக மணிக்கு 23 கி.மீ., என்ற அடிப்படையில் காற்றின் வேகம்  உள்ளது.இந்நிலை நீடித்தால், காற்றாலைகளில் மின் உற்பத்தி, இலக்கை எட்டும் வாய்ப்புள்ளது.அதிக காற்றால் தேசிய, மாநில நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு வறட்சியாக வேகத்துடன் காற்று வீசுவதால் விளைநிலங்களில் ஈரப்பதம் வேகமாக காய்ந்து விடும். எனவே விவசாயிகள் அதற்கேற்ப நீர் நிர்வாகத்தை மாற்றி வருகின்றனர். தென்னை மரங்களின் வட்டப்பாத்தியில் மூடாக்கு அமைத்தல், பலத்த காற்றால் மரங்கள் சாயாமல் இருக்க அறுவடைக்கு தயாராக இருக்கும் வாழை மரங்களுக்கு முட்டு கொடுத்தல், கயிறு கட்டுதல் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.தென்மேற்கு பருவமழை துவங்கும் வரை வறண்ட காற்று மற்றும் வெயில் இதே நிலையில் நீடிக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
    பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள் கண் எரிச்சலால் திக்கப்படுகின்றனர். அடிக்கடி அங்குள்ள குப்பையில் தீ வைக்கப்படுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி  53வது வார்டு ஏ.பி.நகர் பஸ்  நிறுத்தம் பகுதியில்   குப்பையில் நேற்று முதல் தீப்பற்றி எரிகிறது. அருகில் பெட்ரோல் பங்க் இருக்கிறது.  

    அப்பகுதி சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாகும்.  புகை மூட்டம்  ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள்  கண் எரிச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அடிக்கடி அங்குள்ள குப்பையில் தீ வைக்கப்படுகிறது.  இதில் ஈடுபடுபவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர்களாகிய நாங்கள் வீடுகள் கட்டி வசித்து வருகிேறாம்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட  பள்ளபாளையம் பகுதி  அருந்ததியர் சமுதாய மக்கள்  இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்  என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

    இது குறித்து அவர்கள் ஜமாபந்தியில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, 

    பல்லடம் வட்டம் சாமளாபுரம் கிராமம் பள்ளபாளையம் ராசவாய்க்கால் மேடு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர்களாகிய நாங்கள் வீடுகள் கட்டி வசித்து வருகிேறாம். எங்களுக்கு அந்த இடத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்.மேலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய எங்களுக்கு அரசு இலவசமாக வீடு கட்டி தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    தினமும் 30 ரூபாய் வட்டிக்கு பணம் கொடுத்து அளவுக்கு அதிகமான பணத்தை வசூலிக்கின்றனர்.

    திருப்பூர்:

    அவிநாசி ராயம்பாளையம் காலனியில் வசித்து வந்த பரிமளா என்ற பேரூராட்சி தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர் கந்து வட்டி, கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டது அவிநாசி பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வேலைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டாலோ, வருமானம் தடைபடும் போது, வட்டி செலுத்த முடியாத நிலைக்கு சிலர் தள்ளப்படுகின்றனர். இதனால் அவர்களது கடன் தொகை அதிகரித்து வட்டி சுமையும் அதிகரிக்கிறது.

    திருப்பூரில் உள்ள சில சந்தைகளுக்கு வரும் வியாபாரிகள் பலர் தினமும் 30 ரூபாய் வட்டிக்கு பணம் கொடுத்து அளவுக்கு அதிகமான பணத்தை வசூலிக்கின்றனர். அதாவது காலையில் 1,000ரூபாய் கடன் வாங்கினால் மாலையில் 1,300 ஆக திருப்பி கொடுக்க வேண்டும்.இவ்வாறு நாள் வட்டி, மீட்டர் வட்டி, ஹவர்வ ட்டி என பல முறைகளில் வட்டித்தொழில் அவிநாசி, சேவூர் உட்பட திருப்பூர் மற்றும் மாவட்டம் முழுவதும் கொடி கட்டி பறக்கிறது.

    கந்துவட்டி தொழிலில் யாரும் ஈடுபடக்கூடாது. கந்து வட்டியில் சிக்கி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையை தவிர்க்க, கிராமம் தோறும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்பாதிப்பு வந்தபின்அவர்களுக்காக குரல் கொடுப்பதை காட்டிலும், கந்துவட்டியில் சிக்கி தவிக்கும் குடும்பத்தினரை முன் கூட்டியேமீட்டெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில்,கந்து வட்டிக்கு கடன் வாங்கி டார்ச்சருக்கு உள்ளாவோர் போலீசில் புகார் கொடுக்கலாம். அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கந்துவட்டி மட்டுமின்றி, போதை பொருள் புழக்கம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தவிர்ப்பது தொடர்பாகவும் கிராமங்கள் தோறும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகையவிழிப்புணர்வு தொடர்ந்து வழங்கப்படும்.துணிந்து புகார் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது தலைமை வகித்தார்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் ஒன்றிய  பா.ஜ.க.அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை கட்டுப்படுத்தகோரியும், சிறு, குறு, தொழில்களை பாதுகாக்க தவறியதை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது தலைமை வகித்தார். 

    ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பரமசிவம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர்மூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நீர்ப்பாசன ஆதாரங்களை பெருக்காமல், பாசன பரப்பு 3 லட்சம் ஏக்கரில் இருந்து 4 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் கடின உழைப்பால் மேம்படுத்தி பி.ஏ.பி.,யை நம்பி தென்னை சாகுபடி செய்துள்ளனர்.
    திருப்பூர்:
    அனைத்து ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், கிராமங்களில் ஒரு பண்ணை குடும்பத்திற்கு 3 தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்குகிறது.ஏற்கனவே பல லட்சம் தென்னை மரங்களை விவசாயிகள் நட்டு வைத்துள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தென்னை பிரதானமாக உள்ளது. பி.ஏ.பி., யை நம்பியே விவசாயிகள் தென்னை சாகுபடி செய்துள்ளனர்.

    நீர்ப்பாசன ஆதாரங்களை பெருக்காமல், பாசன பரப்பு 3 லட்சம் ஏக்கரில் இருந்து 4 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டது.ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் எடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்னை சாகுபடிசெய்த விவசாயிகள் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.ஒருவருக்கு 3 தென்னங்கன்றுகள் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகசுந்தரம் கூறுகையில்,  மேய்ச்சல் நிலமாக இருந்ததை விவசாயிகள் தங்கள் கடின உழைப்பால் மேம்படுத்தி பி.ஏ.பி.,யை நம்பி தென்னை சாகுபடி செய்துள்ளனர்.அரசின் குளறுபடிகளால் பாசன திட்டம் நாசமாகியுள்ளது. தென்னை காய்ந்ததால் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒரு தலைமுறை உரிமை பறிபோய் விட்டது. நீராதாரங்களை பெருக்காமல் தென்னங்கன்று வழங்குவது புரிதல் இல்லாத அரசு என்பதையே இது காட்டுகிறது.

    மொத்தமாக கொள்முதல் செய்தால், 50 ரூபாய்க்கு கிடைக்கும். ஒரு கன்று 150 ரூபாய் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு தோப்புகளிலும் நூற்றுக்கணக்கான காய்கள் முளைத்து கிடக்கின்றன.இருக்கின்ற மரங்களை காப்பாற்ற வழி இல்லாத நிலையில் இது தேவை இல்லாதது என்றார்.
    நிலத்தடி நீர் மட்டம் குறைவால் விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். தரத்தின் அடிப்படையில், வெண்டை கிலோ, 30-40 ரூபாய் வரை விலை கிடைத்து வருகிறது.
    குடிமங்கலம்:

    குடிமங்கலம் வட்டாரத்தில் கிணற்றுப்பாசனத்துக்கு தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. மேலும், பி.ஏ.பி., பாசனத்துக்கு, மக்காச்சோளமும், மானாவாரியாக, கொத்தமல்லி, கொண்டைக்கடலை அதிக பரப்பில், சாகுபடி செய்யப்படுகிறது.

    நிலத்தடி நீர் மட்டம் குறைவால் அப்பகுதி விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஆர்வம் காட்டாமல், இருந்தனர்.இந்நிலையில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால், நிலத்தடி நீர் மட்டம் அப்பகுதியில் உயர்ந்தது. இதையடுத்து சிறு, குறு விவசாயிகள் காய்கறி சாகுபடிக்கு ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.அவ்வகையில் கொத்தமல்லி தழை, பொரியல் தட்டை, தக்காளி, கத்தரி, பீட்ரூட், வெண்டை உள்ளிட்ட காய்கறி சாகுபடி பரப்பு குடிமங்கலம் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வழக்கமாக, கோடை காலத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, கிணறு மற்றும் போர்வெல்களில் வரத்து பாதிக்கும். எனவே, காய்கறி சாகுபடி மேற்கொள்வதில்லை. இந்தாண்டு, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதுடன், கோடை கால மழையும் கைகொடுத்து வருவதால் அனைத்து காய்கறி சாகுபடியிலும் நல்ல விளைச்சல் உள்ளது என்றனர்.

    குடிமங்கலம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெண்டை விற்பனைக்காக உடுமலை சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. தரத்தின் அடிப்படையில், வெண்டை கிலோ, 30-40 ரூபாய் வரை விலை கிடைத்து வருகிறது. சீரான விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

    ×