என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பல்லடம் அருகே பஞ்சு மில்லில் தீ விபத்து
Byமாலை மலர்4 Jun 2022 10:51 AM GMT (Updated: 4 Jun 2022 10:51 AM GMT)
வேலை செய்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் அங்கிருந்த சுமார் 30 தொழிலாளர்கள் உயிர் தப்பினர் .
பல்லடம்:
பல்லடம் அருகே கல்லம்பாளையத்தை சேர்ந்தவர் மனோஜ்.இவர் அந்தப் பகுதியில் பஞ்சு மில் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று மதியம் பஞ்சுமில்லில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து உள்ளே வேலை செய்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். தீ விபத்து குறித்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்குள் பஞ்சு இருப்பு அறை, மற்றும் பஞ்சு கலவை அறை ஆகியவற்றில் தீ மளமளவென பற்றி அங்கிருந்த எந்திரங்கள் மற்றும் பஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பலாகின.
இதன் மதிப்பு சுமார் பல லட்சம் ரூபாய் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் அங்கிருந்த சுமார் 30 தொழிலாளர்கள் உயிர் தப்பினர் .தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X