search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் வழியாக இயக்கப்படும் 8 ரெயில்களில் கூடுதலாக படுக்கை வசதி பெட்டி இணைப்பு

    மங்களூரு- சென்னை செல்லும் ரெயிலில் (எண்.12602) இன்று முதல் கூடுதலாக 1 படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்.ரெயில்கள் போத்தனூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    மங்களூரு - சென்னை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (எண்.22638) கூடுதலாக 1 படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இது போல் சென்னை - மங்களூரு செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ் பிரஸ் ரெயிலில் (எண்.22637) நாளை 4-ந் தேதி முதல் 1 படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும். சென்னை - மங்களூரு செல்லும் ரெயிலில் (எண்.12601) நேற்று (வியா ழக்கிழமை) முதல் கூடுதலாக 1 படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

    அதுபோல் மங்களூரு - சென்னை செல்லும் ரெயிலில் (எண்.12602) இன்று முதல் கூடுதலாக 1 படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும். திருவனந்தபுரம் - சாலிமர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (எண்.22641) இன்று முதலும், சாலிமர் - திருவனந்தபுரம் வாராந்திர எக்ஸ்பி ரஸ் ரெயிலில் (எண்.22642) வருகிற 5-ந் தேதி முதலும் 1 படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி-ஸ்ரீமாதா வைஷ்ணவ் தேவி கட்ரா வாராந்திர ரெயிலில் (எண். 16317) இன்று முதலும், ஸ்ரீமாதா வைஷ்ணவ் தேவி கட்ரா-கன்னியாகுமரி வராந் திர ரெயிலில் (எண். 16318) வருகிற 6-ந் தேதி முதலும் 1 படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது. மேற்கண்ட 8 ரெயில்களிலும் நிரந்தரமாக 1 படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது. இந்த ரெயில்கள் போத்தனூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×