search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்துவட்டி தொழில்"

    தினமும் 30 ரூபாய் வட்டிக்கு பணம் கொடுத்து அளவுக்கு அதிகமான பணத்தை வசூலிக்கின்றனர்.

    திருப்பூர்:

    அவிநாசி ராயம்பாளையம் காலனியில் வசித்து வந்த பரிமளா என்ற பேரூராட்சி தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர் கந்து வட்டி, கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டது அவிநாசி பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வேலைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டாலோ, வருமானம் தடைபடும் போது, வட்டி செலுத்த முடியாத நிலைக்கு சிலர் தள்ளப்படுகின்றனர். இதனால் அவர்களது கடன் தொகை அதிகரித்து வட்டி சுமையும் அதிகரிக்கிறது.

    திருப்பூரில் உள்ள சில சந்தைகளுக்கு வரும் வியாபாரிகள் பலர் தினமும் 30 ரூபாய் வட்டிக்கு பணம் கொடுத்து அளவுக்கு அதிகமான பணத்தை வசூலிக்கின்றனர். அதாவது காலையில் 1,000ரூபாய் கடன் வாங்கினால் மாலையில் 1,300 ஆக திருப்பி கொடுக்க வேண்டும்.இவ்வாறு நாள் வட்டி, மீட்டர் வட்டி, ஹவர்வ ட்டி என பல முறைகளில் வட்டித்தொழில் அவிநாசி, சேவூர் உட்பட திருப்பூர் மற்றும் மாவட்டம் முழுவதும் கொடி கட்டி பறக்கிறது.

    கந்துவட்டி தொழிலில் யாரும் ஈடுபடக்கூடாது. கந்து வட்டியில் சிக்கி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையை தவிர்க்க, கிராமம் தோறும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்பாதிப்பு வந்தபின்அவர்களுக்காக குரல் கொடுப்பதை காட்டிலும், கந்துவட்டியில் சிக்கி தவிக்கும் குடும்பத்தினரை முன் கூட்டியேமீட்டெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில்,கந்து வட்டிக்கு கடன் வாங்கி டார்ச்சருக்கு உள்ளாவோர் போலீசில் புகார் கொடுக்கலாம். அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கந்துவட்டி மட்டுமின்றி, போதை பொருள் புழக்கம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தவிர்ப்பது தொடர்பாகவும் கிராமங்கள் தோறும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகையவிழிப்புணர்வு தொடர்ந்து வழங்கப்படும்.துணிந்து புகார் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×