search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmers association"

    • ஜூலை மாதம் வந்த காவிரி நீர் காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை.
    • காரைக்காலுக்கான காவிரி நீரை உரிமையோடு பெற்றுதர முன்வரவேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட கடைமடை பகுதி விவசாயிகள் சங்க தலைவர் சுரேஷ், புதுச்சேரி முதல்-அமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    மேட்டூரில் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட காவிரி நீரின் ஒரு சிறிய அளவிலான பகுதி, கடந்த ஜூலை மாதம், டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான காரைக்காலுக்கு வந்தது. காரைக்காலுக்கு 7 டி.எம்.சி. நீர் என்பது கானல் நீராக மாறிவிட்டது. ஜூலை மாதம் வந்த காவிரி நீர் காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. தொடர்ந்து வரும் என நம்பி ஏராளமான விவசாயிகள், குறுவை சாகுபடி செய்தனர். ஆனால் அதன்பிறகு தண்ணீர் வரவில்லை.

    புதுச்சேரி அரசின் நிதி பற்றாகுறையால், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் பழுதாகி, சரி செய்யமுடியாமல், ஆழ்குழாய் நீரும் இன்றி, விவசாயிகள் குறுவையை காப்பாற்ற வழியின்றி தவித்து வருகின்றனர். பல இடங்களில் நெற்பயிர்கள் கருக தொடங்கியுள்ளது. இதனால் 600 ஹெக்டேர் குறுவை சாகுபடி கேள்விக்குறியாக நிற்கிறது. எனவே, புதுச்சேரி முதல்-அமைச்சர் மற்றும் வேளாண் அமைச்சர் ஆகியோர், கர்நாடகா அரசு மற்றும் மத்திய அரசுக்கு முறைப்படி கடிதம் எழுதி, காரைக்காலுக்கான காவிரி நீரை உரிமையோடு பெற்றுதர முன்வரவேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

    • களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் செல்போன் வெளிச்சத்தில், மத்திய அரசு விவசாய இடுபொருளான ரசாயன உரத்திற்கு மானியம் வழங்கிட வேண்டும்.
    • நெல்லுக்கு ஆதரவு விலையை ரூ.2,500 ஆக்கிடவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    களக்காடு:

    களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் செல்போன் வெளிச்சத்தில், மத்திய அரசு விவசாய இடுபொருளான ரசாயன உரத்திற்கு மானியம் வழங்கிட வேண்டும். மின்சார சட்டத்தை திரும்ப பெற வேண்டும், விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்திடவும், கலப்படமான உரங்களை கண்டுபிடித்து தடை செய்யவும், நெல்லுக்கு ஆதரவு விலையை ரூ.2,500 ஆக்கிடவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பெரும்படையார் பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகன், துணைச் செயலாளர்கள் லெனின்முருகானந்தம் பாலன், பொருளாளர் அயூப்கான் நகர செயலாளர் முத்துவேல், இளைஞர் அமைப்புச் செயலாளர் திருமணி ஒன்றிய குழு உறுப்பினர்கள் முருகன், கோஷிமின் ஜவகர், ஸ்ரீதரன், கருணாகரன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நீர்ப்பாசன ஆதாரங்களை பெருக்காமல், பாசன பரப்பு 3 லட்சம் ஏக்கரில் இருந்து 4 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் கடின உழைப்பால் மேம்படுத்தி பி.ஏ.பி.,யை நம்பி தென்னை சாகுபடி செய்துள்ளனர்.
    திருப்பூர்:
    அனைத்து ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், கிராமங்களில் ஒரு பண்ணை குடும்பத்திற்கு 3 தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்குகிறது.ஏற்கனவே பல லட்சம் தென்னை மரங்களை விவசாயிகள் நட்டு வைத்துள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தென்னை பிரதானமாக உள்ளது. பி.ஏ.பி., யை நம்பியே விவசாயிகள் தென்னை சாகுபடி செய்துள்ளனர்.

    நீர்ப்பாசன ஆதாரங்களை பெருக்காமல், பாசன பரப்பு 3 லட்சம் ஏக்கரில் இருந்து 4 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டது.ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் எடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்னை சாகுபடிசெய்த விவசாயிகள் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.ஒருவருக்கு 3 தென்னங்கன்றுகள் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகசுந்தரம் கூறுகையில்,  மேய்ச்சல் நிலமாக இருந்ததை விவசாயிகள் தங்கள் கடின உழைப்பால் மேம்படுத்தி பி.ஏ.பி.,யை நம்பி தென்னை சாகுபடி செய்துள்ளனர்.அரசின் குளறுபடிகளால் பாசன திட்டம் நாசமாகியுள்ளது. தென்னை காய்ந்ததால் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒரு தலைமுறை உரிமை பறிபோய் விட்டது. நீராதாரங்களை பெருக்காமல் தென்னங்கன்று வழங்குவது புரிதல் இல்லாத அரசு என்பதையே இது காட்டுகிறது.

    மொத்தமாக கொள்முதல் செய்தால், 50 ரூபாய்க்கு கிடைக்கும். ஒரு கன்று 150 ரூபாய் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு தோப்புகளிலும் நூற்றுக்கணக்கான காய்கள் முளைத்து கிடக்கின்றன.இருக்கின்ற மரங்களை காப்பாற்ற வழி இல்லாத நிலையில் இது தேவை இல்லாதது என்றார்.
    உர விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பாடாலூர்:

    உர விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஆலத்தூர் வட்ட துணைத் தலைவர் தங்கராஜு தலைமை வகித்தார். வட்டத் தலைவர் அண்ணாதுரை, செயலாளர் பச்சையா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செல்லதுரை, மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். 

    கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சக்திவேல், மாவட்ட துணைத் தலைவர்கள் கருப்புடையார் , விநாயகம் ,வட்டத் தலைவர் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலாளர் ராஜாங்கம், மாவட்டத் குழு உறுப்பினர் முருகேசன், வட்டக் குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர். ஆர்ப்பாட்டத்தில் உர விலையை குறைக்க வேண்டும், யூரியா எடை குறைப்பை கைவிட வேண்டும். 

    கூட்டுறவு சங்கத்தில் புதிய விவசாயக் கடன் வழங்க வேண்டும். இரூரில் பொதுப் பாதையை தனிநபர் பட்டா போட்டதை ரத்து செய்ய வேண்டும் . நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பை எடுக்க வேண்டும், இரூர் காலணி தெருவில் தண்ணீர் தேங்காமல் கால்வாய் அமைக்க வேண்டும்.பெருமாள் பாளையம் ஏரியில் கிராவல் திருட்டை தடுக்க வேண்டும். பாடாலூரில் அவசர சிகிச்சைக்காக புதிய அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும், கிரஷர் லாரியை முறையான பாதையில் இயக்க வேண்டும் , என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கம், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். #sterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி மனுக்கள் பெற்றார். அப்போது உடன்குடி வட்டார விவசாயிகள் மற்றும் பசுமை ஆர்வலர்கள் நலச்சங்க தலைவர் தினகரன் தலைமையில் 40-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    எங்கள் பகுதி விவசாய பகுதியாகும். நாங்கள் விவசாயத்து பிரதான உரமான டி.ஏ.பி. உரத்தை பயன்படுத்தி வருகிறோம். தற்போது உரம் தட்டுப்பாட்டால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சல்பியூரிக் ஆசிட், பாஸ்பாரிக் ஆசிட் ஆகியவைகள் ஸ்பிக் நிறுவனத்துக்கு கிடைக்காததால் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருப்பது தான்.

    ஸ்டெர்லைட் ஆலை எங்கள் விவசாயத்துக்கு கால்வாய் சுத்தம் செய்தல், குளம் தூர்வாருதல், வண்டல் மண் அடித்து கொடுத்தல் மற்றும் நிறைய பராமரிப்பு பணிகளை பல கோடி ரூபாய்களுக்கு செய்து தருகிறார்கள். எங்கள் பகுதி இளைஞர்கள் பலர் ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்து வந்தனர். இப்போது அவர்களுக்கு வேலை இல்லை. பல கஷ்டங்களில் இருக்கும் எங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

    தூத்துக்குடி மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் மாநில துணை தலைவர் சொக்கலிங்கம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தியின் முழு உருவ வெண்கல சிலை உள்ளது. இந்த சிலை மற்றும் பீடம் சற்று உயரமாக இருப்பதால், மகாத்மா காந்தியின் பிறந்த நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த சிரமம் ஏற்படுகிறது. எனவே காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வசதியாக அங்கு ஒரு நிரந்தர படிக்கட்டு ஏணி அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தார். #sterlite
    ×