என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காரைக்காலுக்கு காவிரி நீரை பெற அரசு முன்வரவேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை
- ஜூலை மாதம் வந்த காவிரி நீர் காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை.
- காரைக்காலுக்கான காவிரி நீரை உரிமையோடு பெற்றுதர முன்வரவேண்டும்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட கடைமடை பகுதி விவசாயிகள் சங்க தலைவர் சுரேஷ், புதுச்சேரி முதல்-அமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
மேட்டூரில் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட காவிரி நீரின் ஒரு சிறிய அளவிலான பகுதி, கடந்த ஜூலை மாதம், டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான காரைக்காலுக்கு வந்தது. காரைக்காலுக்கு 7 டி.எம்.சி. நீர் என்பது கானல் நீராக மாறிவிட்டது. ஜூலை மாதம் வந்த காவிரி நீர் காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. தொடர்ந்து வரும் என நம்பி ஏராளமான விவசாயிகள், குறுவை சாகுபடி செய்தனர். ஆனால் அதன்பிறகு தண்ணீர் வரவில்லை.
புதுச்சேரி அரசின் நிதி பற்றாகுறையால், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் பழுதாகி, சரி செய்யமுடியாமல், ஆழ்குழாய் நீரும் இன்றி, விவசாயிகள் குறுவையை காப்பாற்ற வழியின்றி தவித்து வருகின்றனர். பல இடங்களில் நெற்பயிர்கள் கருக தொடங்கியுள்ளது. இதனால் 600 ஹெக்டேர் குறுவை சாகுபடி கேள்விக்குறியாக நிற்கிறது. எனவே, புதுச்சேரி முதல்-அமைச்சர் மற்றும் வேளாண் அமைச்சர் ஆகியோர், கர்நாடகா அரசு மற்றும் மத்திய அரசுக்கு முறைப்படி கடிதம் எழுதி, காரைக்காலுக்கான காவிரி நீரை உரிமையோடு பெற்றுதர முன்வரவேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்