உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி
தஞ்சையில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலியானார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் தேவராயன்பேட்டை பண்டாரவாடையை சேர்ந்தவர் சரவணன். தஞ்சை மாரியம்மன் கோவிலை சேர்ந்தவர் சரண்ராஜ் (28). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சரண்ராஜ் ஓட்டினார்.
தஞ்சை அருகே நாகை புறவழி சாலையில் மோட்டார் சைக்கிள் சென்றபோது திடீரென கட்டுப் பாட்டை இழந்தது. ரோட்டில் தாறுமாறாக ஓடியதில் பின்னால் அமர்ந்திருந்த சரவணன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப் பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.