உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் சித்தா மருந்து தயாரிக்கும் ஆலை ஒன்றை நிறுவ வேண்டும்- விஜய் வசந்த் கோரிக்கை
மூலிகைகள் அதிகமாக விளையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்தா மருந்து தயாரிக்கும் ஆலை ஒன்றை நிறுவ வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.
நாகர்கோவில்:
பாராளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது விஜய் வசந்த் எம்.பி. பேசியதாவது:-
நாகர்கோவில் சித்தா மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு தனி வெளி நோயாளிகள் பிரிவு வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மேலும் மூலிகைகள் அதிகமாக விளையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்தா மருந்து தயாரிக்கும் ஆலை ஒன்றை நிறுவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த ஆயுஷ் துறை அமைச்சர் நாகர்கோவில் சித்தா மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு துவங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் என தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது விஜய் வசந்த் எம்.பி. பேசியதாவது:-
நாகர்கோவில் சித்தா மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு தனி வெளி நோயாளிகள் பிரிவு வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மேலும் மூலிகைகள் அதிகமாக விளையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்தா மருந்து தயாரிக்கும் ஆலை ஒன்றை நிறுவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த ஆயுஷ் துறை அமைச்சர் நாகர்கோவில் சித்தா மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு துவங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் என தெரிவித்தார்.