உள்ளூர் செய்திகள்
விஜய் வசந்தை சந்தித்து பேசிய உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவி

விஜய் வசந்தை சந்தித்து பேசிய உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவி

Published On 2022-03-19 09:34 GMT   |   Update On 2022-03-19 09:34 GMT
உக்ரைன் நாட்டில் இருந்து பத்திரமாக மீட்டு வரப்பட்ட குமரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ மாணவி அஜுலிஷா நேற்று தனது பெற்றோருடன் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தை சந்தித்து பேசினார்.
நாகர்கோவில்:

உக்ரைன் நாட்டில் இருந்து பத்திரமாக மீட்டு வரப்பட்ட குமரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ மாணவி அஜுலிஷா  நேற்று தனது பெற்றோருடன்  குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தை சந்தித்து பேசினார்.

அப்போது மாணவி அஜுலிஷா, பத்திரமாக தாய்நாட்டுக்கு திரும்ப வந்து சேர்ந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அதற்காக முயற்சிகள் மேற்கொண்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
Tags:    

Similar News