உள்ளூர் செய்திகள்
பயிற்சி வகுப்பை எஸ்.பி., சசாங் சாய் தொடங்கி வைத்து பேசிய காட்சி.

நேர்மையுடன் கண்ணியமாக காவல் பணி செய்ய வேண்டும்- எஸ்.பி., அறிவுறுத்தல்

Published On 2022-03-15 09:57 GMT   |   Update On 2022-03-15 09:57 GMT
பயிற்சி காவலர்களுக்கு வாழ்த்துக்கள் கூறியதுடன் காவல் பணியின் நெறிமுறைகள் மற்றும் வழிமுறைகளை எஸ்.பி.,விளக்கினார்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட  ஆயுதப்படை தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில்  பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதில்  மாவட்ட எஸ்.பி.,சசாங் சாய் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் திருப்பூர் மாவட்டத்தில் பயிற்சி பெறும் 100 பயிற்சி காவலர்களுக்கு வாழ்த்துக்கள் கூறியதுடன் காவல் பணியின் நெறிமுறைகள் மற்றும் வழிமுறைகளை விளக்கினார். மேலும்  காவலர்கள் நேர்மை மாறாமல் கண்ணியமாக காவல் பணி செய்ய வேண்டும் என்றார்.
Tags:    

Similar News