உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 300-க்கும் கீழ் குறைந்தது
அரியலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய தொற்று பதிவாகவில்லை.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 292 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 320 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 300க்கும் கீழ் குறைந்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 50 ஆயிரத்து 333 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று 83 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் 43 பேருக்கும், செங்கல்பட்டில் 34 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய தொற்று பதிவாகவில்லை.
இன்று ஒரே நாளில் 778 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 8 ஆயிரத்து 373 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,010 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் 3,950 பேர் சிகிச்சையில் உள்ளனர்.