search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tn Corona update"

    • மருத்துவமனையில் 381 பேர் கொரோனா சிகிச்சைக்காக அனுமதி.
    • அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

    தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில் இன்று புதிதாக 247 ஆண்கள், 187 பெண்கள் என மொத்தம் 434 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 85 பேர், கோவையில் 59 பேர், செங்கல்பட்டில் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாதிப்பு இல்லை,

    அவற்றை தவிர பிற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. மருத்துவமனைகளில் இன்று 381 பேர் மட்டும் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4 ஆயிரத்து 896 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

    • சென்னையில் 90 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மேலும் 539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 628 ஆக உள்ளது.

    இதுவரை 35 லட்சத்து 22 ஆயிரத்து 660 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகம் முழுவதும் 5,407 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    • சென்னையில் 561 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
    • கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை.

    தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில மக்கள் நலவாழ்வு மற்றும் மருத்துவத்துறை தகவல் வெளியிட்டு வருகிறது.

    அதன்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,142 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 22 ஆயிரத்து 142 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 2,219 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை.

    கொரோன தொற்று பாதிப்பை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 31,116 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தலைநகர் சென்னையில் இன்று 561 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

    • சென்னையில் இன்று 575 பேருக்கு கொரோனா பாதிப்பு
    • கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை.

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

    அதன்படி தமிழகத்தில் இன்று புதிதாக 2,223- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

    கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,402- ஆகும். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. கொரோனா தொற்று பரவலைக் கண்டறிய இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 33,312 ஆகும். தலைநகர் சென்னையில் இன்று 575- பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

    • கொரோனா தொற்றில் இருந்து இன்று 2,458 பேர் குணமடைந்தனர்.
    • கொரோனா தொற்றால் பாதிப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

    தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கூடுதலாக 2,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 17 ஆயிரத்து 777- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று 2,458 பேர் குணம் அடைந்துள்ளனர். எனினும், தொற்று பாதிப்பால் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

    கொரோனா தொற்றைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரத்து 135 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் இன்று 596- பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் மேலும் 2,312- பேருக்கு கொரோனா தொற்று
    • கடந்த 24 மணி நேரத்தில் 33,058 பேர்களிடம் கொரோனா பரிசோதனை.

    இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் மேலும் 2,312- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 13 ஆயிரத்து 121- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 2,682 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    தொற்று பரவலைக் கண்டறிய இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 058- ஆகும். தலைநகர் சென்னையில் 618- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    • இன்று 1,542 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
    • சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15,616- ஆக உள்ளது.

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று புதிதாக 2,654 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 85 ஆயிரத்து 429- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,542 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை.

    தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 30,545 ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்று 1,066 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15,616- ஆக உள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.

    • சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1072 பேருக்கு கொரோனா.
    • கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 1,487 குணமடைந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ள தினசரி கொரோனா பாதிப்பு நிலவரப்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,672- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 14,504- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,487- பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 1072 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 373 பேருக்கும், கோவையில் 145 பேருக்கும், திருவள்ளூரில் 131 பேரும் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

    • கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 13,319- ஆக உயர்வு உயர்வு.
    • கொரோனாவில் இருந்து இன்று 1,372 பேர் குணமடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டு வரும் தினசரி பாதிப்பு தகவலின்படி நேற்று 2,385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    இன்று அதன் எண்ணிக்கை 2,500 தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் புதிதாக 2,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 13,319- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 1,372 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் இன்று 1,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆவது நாளாக 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
    • இன்று மட்டும் கொரோனாவில் இருந்து 1,321 பேர் குணமடைந்து உள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று புதிதாக 2,385 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஒருநாள் பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று 909 ஆக இருந்த பாதிப்பு இன்று 1,025 ஆக அதிகரித்துள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 369 பேரும், திருவள்ளூரில் 121பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கோவையில் 118பேரும், கன்னியாகுமரியில் 72பேரும், காஞ்சிபுரத்தில் 84 பேரும், திருச்சியில் 67 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எதுவும் இல்லை. இன்று கொரோனாவில் இருந்து 1,321 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12 ஆயிரத்து 158 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல மாவட்டங்களில் முககவசம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
    • கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 322 பேர் குணம் அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் புதிதாக 737 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் புதிதாக 383 பேருக்கும், செங்கல்பட்டில் 128 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

    கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4366 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 322- பேர் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 700 ஐ தாண்டியுள்ளதால் பல மாவட்ட நிர்வாகங்கள் முககவசம் கட்டாயம் என அறிவித்துள்ளன.

    ×