உள்ளூர் செய்திகள்
பூ மார்க்கெட்

கோயம்பேட்டில் பூ-பழம், மளிகை மார்க்கெட் நாளை வழக்கம் போல் செயல்படும்- வியாபாரிகள் அறிவிப்பு

Published On 2022-02-18 09:36 GMT   |   Update On 2022-02-18 09:36 GMT
கோயம்பேட்டில் பூ, பழம் மற்றும் மளிகை மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் நாளை வழக்கம் போல செயல்படும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
போரூர்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடக்கிறது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி மொத்த விற்பனை மற்றும் சிறு மொத்த விற்பனை கடைகளுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோயம்பேட்டில் பூ, பழம் மற்றும் மளிகை மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் நாளை வழக்கம் போல செயல்படும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Tags:    

Similar News