உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் பொதுமக்கள் தர்ணா - உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு
சாக்கடை வசதி இல்லாததால் கழிவு நீர் வீட்டிற்குள் புகுந்து விடுகிறது.
திருப்பூர்;
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பலவஞ்சிபாளையம் திருகுமரன் நகர் 1-வது வீதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று தங்களது பகுதியில் குடிநீர், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 30 ஆண்டுகளாக திருக்குமரன் நகர் 1 வது வீதியில் வசித்து வருகிறோம். இங்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. சாக்கடை வசதி இல்லாததால் கழிவு நீர் வீட்டிற்குள் புகுந்து விடுகிறது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற பல நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன கொசுமருந்துகள் அடிப்பதற்கும் வருவதில்லை.
எனவே சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதி, தார் சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற வசதிகளை செய்து தர வேண்டும்.
எங்களது கோரிக்கையை நிறைவேற்றி தராத பட்சத்தில் திருக்குமரன் நகர் 1-வது வீதி ஊர் பொதுமக்கள் வரும் உள்ளாட்சி தேர்தலை முற்றிலும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இவர் அந்த மனுவில் கூறியுள்ளனர்.