உள்ளூர் செய்திகள்
கைது

புதுவையில் இருந்து மதுபானம் கடத்திய வாலிபர்கள் கைது

Published On 2022-01-19 11:06 GMT   |   Update On 2022-01-19 11:06 GMT
திருமண விருந்துக்கு புதுவையில் இருந்து மது கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கண்டமங்கலம்:

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள மிட்டாமண்டகப்பட்டு பகுதியில் கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது புதுவையில் இருந்து 2 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை மடக்கி விசாரணை செய்தனர்.

அப்போது அவர்கள் புதுவையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் புதுச்சேரி தட்டாஞ்சாவடி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேகர் மகன் சந்துரு( 24) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஆதவன் (23)என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் கடலூர் மாவட்டம் மேல்பட்டாம் பாக்கம் பகுதியில் நடக்கும் திருமண விழா விருந்திற்கு மதுபாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றதாக தெரிவித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100 குவார்ட்டர் பாட்டில்கள் அடங்கிய சாக்கு மூட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.12 ஆயிரம் ஆகும்.

கைது செய்யப்பட்ட வாலிபர்கள் இருவரையும் விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி மதுபாட்டில்களை ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News