செய்திகள்
கோப்புபடம்

ஊத்துக்குளியில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வடமாநில வாலிபர் கைது

Published On 2021-10-25 08:17 GMT   |   Update On 2021-10-25 08:17 GMT
பஸ்சில் பயணம் செய்த ஜார்க்கண்ட் மாநில இளைஞர் ராகுல்கைபுரு என்பவருக்கும் அரசு பஸ் நடத்துனருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து விஜயமங்கலம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் நடத்துனராக கிரிபால் ( வயது 38) என்பவர் இருந்தார். இந்தநிலையில் பஸ் ஊத்துக்குளி அடுத்த மேட்டுக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் வந்தது.

பஸ்சில் பயணம் செய்த ஜார்க்கண்ட் மாநில இளைஞர் ராகுல்கைபுரு (21) என்பவருக்கும் அரசு பஸ் நடத்துனருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த வடமாநில வாலிபர் பஸ் கண்டக்டரை தாக்கியதாக தெரிகிறது. 

இதில் காயமடைந்த கிரிபால் ஊத்துக்குளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து ராகுல்கைபுருவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News