செய்திகள்
கொள்ளை

பள்ளிபாளையத்தில் கடையின் பூட்டை உடைத்து 6 செல்போன்கள் திருட்டு

Published On 2021-09-05 10:48 GMT   |   Update On 2021-09-05 10:49 GMT
பள்ளிபாளையத்தில் கடையின் பூட்டை உடைத்து 6 செல்போன்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அக்ரஹாரம் பஸ் நிறுத்தம் அருகே வணிக வளாகம் ஒன்று உள்ளது. இதில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் அங்குள்ள ஒரு செல்போன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் கடையில் இருந்த 6 செல்போன்களை திருடி சென்றனர். மேலும் பக்கத்து கடையின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவங்கள் குறித்து கடைகளின் உரிமையாளர்கள் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் கடையில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News