செய்திகள்
கைது

ஆற்காட்டில் கஞ்சா விற்றவர் கைது

Published On 2021-07-05 10:04 GMT   |   Update On 2021-07-05 10:04 GMT
ஆற்காட்டில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:

ஆற்காடு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆற்காடு தோப்புகானா விளையாட்டு மைதானத்தின் பின்புறமுள்ள முட்புதரில் இருந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் ஆற்காடு ராதாகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 36) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News